மழைக்காலத்தில் சின்ன பசங்க காய்ச்சலில் இருந்து தப்ப இதை மறக்காமல் செய்ங்க!

First Published Sep 24, 2024, 11:25 AM IST

Rainy Season Health Tips For Kids : மழை காலத்தில் குழந்தைகள் ஆரோக்கியமாக இருக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள சில விஷயங்களை மட்டும் பின்பற்றினால் போதும்.
 

தற்போது மழைக்காலம் ஆரம்பமாக போகிறது. மழைக்காலம் வந்தாலே கூடவே அது தொடர்பான நோய்களும் வந்துவிடும். பெரியவர்கள் மட்டுமின்றி, குழந்தைகளை கூட இந்நோய்கள் தாக்குகின்றது. இந்த பருவத்தில் சிறிய அலட்சியம் கூட பெரிய பிரச்சனையை உண்டாக்கிவிடும். காரணம், குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தால் அவர்கள் எளிதில் பாதிப்படைவார்கள்.

எனவே, இந்த மழைக்காலத்தில் குழந்தைகளை  ஆரோக்கியமான முறையில் பராமரிப்பதும், ஆரோக்கியமான உணவுகளை வழங்குவதும் அவர்களை நோயிலிருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும்.இந்த கால நிலையில் குழந்தைகள் அடிக்கடி காய்ச்சல், சளி, இருமல், வயிற்று வலி, தொண்டை வலி போன்ற பிரச்சனைகளால் அதிகமாக பாதிக்கப்படுவார்கள்.

சில சமயங்களில் இந்தோய் குழந்தைகளுக்கு பெரிய அளவில் உடல் உபாதைகளை ஏற்படுத்தும். இதனால் தாய்மார்கள் அதிகம் சிரமத்திற்கு உள்ளாவார்கள். காரணம் அவர்களை கூடுதல் நேரம் ஒதுக்கி மிகவும் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும். இத்தகைய சூழ்நிலையில், இந்த பருவமழை காலத்தில் சிறு சிறு விஷயங்களில் கவனம் செலுத்தினால் மட்டும் போதும். 
 

மழைக்காலத்தில் குழந்தைகளை நோய்கள் அண்டாமல் இருக்க சில டிப்ஸ் :

1. சுத்தம் அவசியம் :

மழை காலத்தில் வீடு ஈரமாக இருப்பதால் கிருமிகள் அதிகமாகவே இருக்கும். எனவே, வீடு மட்டுமின்றி வீட்டை சுற்றியுள்ள பகுதிகளையும் சுத்தமாக வைப்பது மிகவும் அவசியம். இது தவிர, பால்கனி, மொட்டை மாடி போன்ற இடங்களில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். இதனால் கிருமிகள் வருவதை சுலபமாக தடுக்க முடியும். ஒருவேளை தண்ணீர் தேங்கி இருந்தால் அதில் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் கிருமி தொற்றுகள் பரவும். இதனால் குழந்தைகள் எளிதாகவே பாதிக்கப்படுவார்கள்.

2. உடல் சுத்தம் அவசியம் : 

மழை காலத்தில் தினமும் குழந்தைகளை குளிப்பாடவும். ஜலதோஷம், காய்ச்சல், சளி பிடிக்கும் என்று எண்ணி அவர்களை குளிக்க வைக்காமல் இருக்காதீர்கள். முக்கியமாக நீங்கள் மிதமான சூட்டில் குழந்தைகளை குளிப்பாட்டுங்கள். ஆனால், எண்ணெய் குளியல் தவிர்ப்பது நல்லது. ஒருவேளை உங்கள் குழந்தை பிறந்த மாதமே ஆனால் காலை மாலை என இரு வேளையும் உடலை மிதமான சூடு தண்ணீர் கொண்டு துடைத்து எடுக்கவும்.

Latest Videos


அதுபோல குழந்தைகளுக்கு நகங்கள் சீக்கிரமாகவே வளரும் என்பதால், அவ்வப்போது பார்த்து நகத்தை வெட்டி விடுங்கள். கைவிரல் மட்டுமல்ல கால் நகங்களையும் வெட்டி விடுங்கள் ஏனெனில் அவர்கள் வெளியில் விளையாட செல்வதால்..

3. ஆரோக்கியமான உணவு அவசியம் :

மழை காலத்தில் குழந்தைகளுக்கு குளிர்ந்த உணவுகளை கொடுப்பதை தவிர்ப்பது ரொம்பவே நல்லது. எனவே அவர்களுக்கு சூடான உணவை சமைத்துக் கொடுங்கள் இதனால் செரிமானம் எளிதாகும். அதுபோல அதிகமாக சேர்க்காமல் இருப்பது நல்லது வேண்டுமானால் காரத்துக்கு நீங்கள் மிளகாய் சேர்க்கலாம். 

முக்கியமாக அவர்களுக்கு குடிப்பதற்கு மிதமான சூட்டிலேயே தண்ணீர் கொடுங்கள் இதனால் தொண்டையில் இருக்கும் கிருமிகள் அழியும். முடிந்தால் கொதிக்கும் தண்ணீரில் சீரகத்தை போட்டு கொடுங்கள். அவர்களுக்கு தாகம் இருக்கிறதோ இல்லையோ ஆனால் நேரத்திற்கு ஏற்றவாறு அவர்களுக்கு தண்ணீர் கொடுங்கள். அவர்கள் குடிக்க மறுத்தாலும் வலுக்கட்டாயமாக குடிக்க கொடுங்கள். குறிப்பாக காய்ச்சல் வருவதற்கு முன்னெச்சரிக்கையாக துளசி கொடுப்பது நல்லது.

4. வெளி உணவுகள் கொடுப்பதை தவிர்க்கவும் :

மழைக்காலத்தில் குழந்தைகளுக்கு ஒருபோதும் வெளி உணவுகளை வாங்கி கொடுக்க வேண்டாம். அது உயர்தர ஹோட்டலாக இருந்தாலும் கூட அங்கு சமைப்பதற்கு பயன்படுத்தும் தண்ணீர் தரம் குறைவாக இருந்தால் அது குழந்தைகளின் உடலுக்கு உபாதையை ஏற்படுத்தும் என்பது நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

சாக்லேட், குளிர் பானங்கள், ஐஸ்கிரீம், பொறித்த உணவுகள், சொற்கள் நொறுக்குத் தீனிகள், பேக்கரி உணவுகள் போன்ற உணவுகளை குழந்தைகளுக்கு வாங்கி கொடுக்க வேண்டாம். அதற்கு பதிலாக சத்து பானங்கள் வாங்கிக் கொடுக்கலாம். இது அவர்களின் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும்.

5. ஆடையில் கவனம் தேவை :

மழைக்காலத்தில் துணி காயவில்லை அல்லது காய வைக்க இடமில்லை என்று சொல்லி, குழந்தைகளுக்கு வெயில் காலத்தில் போடும் ஆடைகளை மழைக்காலத்தில் போட்டு விடாதீர்கள். அதுபோல தளர்வான ஆடைகளையும் போட்டு விடாதீர்கள். 

மாறாக மழை காலத்திற்கு ஏற்ற முழுக்கையை மறைக்கும் அளவுக்கு சட்டை அணியுங்கள். மேலும் காட்டன் உடைகளை அணிவிக்கலாம். இதனால் கொசுக்கள் மற்றும் பூச்சிகளின் கடியிலிருந்து காப்பாற்றலாம். முக்கியமாக குழந்தைகளை மழைக்காலத்தில் வெளியில் விளையாட அனுமதிக்காமல் இருப்பது ரொம்பவே நல்லது.

6. எலக்ட்ரானிக் பொருட்களை தொட அனுமதிக்காதே!

மழைக்காலத்தில் வீட்டு சுவர்களில் ஈரமாக இருப்பதால் எலக்ட்ரானிக் பொருட்களை சிறுவர்கள் தொடுவதற்கு அனுமதிக்க வேண்டாம். குறிப்பாக ஃபேன் லைட் போன்ற சுவிட்ச் போர்டுகளை போடுவதற்கு அவர்களை அனுமதிக்காமல் இருப்பது நல்லது. குழந்தைகள் விளையாட்டுத்தனமாக ஸ்விட்ச் ஆன் செய்ய ஓடுவார்கள். எனவே அந்த சமயத்தில் மின் இணைப்பை துண்டிப்பது நல்லது. வெளியில் செல்லும்போது கூட மின்சாதனங்களை தொட அனுமதிக்காதீர்கள். அதனால் ஏற்படும் ஆபத்து குறித்து குழந்தைகளுக்கு கண்டிப்பாக எடுத்துச் சொல்லுங்கள்.

இதையும் படிங்க:  துரித உணவில் கலக்கும் அந்த 'ஒரு' பொருள்.. இரவில் கொடுத்தால் குழந்தைகளுக்கு பேராபத்து!!  

முக்கிய குறிப்பு :

மழை காலத்தில் மழைவெளியில் வீட்டின் கதவுகள் ஜன்னல் மூடி வைக்கவும். 

கொசுக்களை விரட்டுவதற்கு பயன்படும் லிக்விடுகளை அல்லது கொசுவர்த்தியை தூங்கும் முன் கண்டிப்பாக அனைத்தும் விடுங்கள். ஏனெனில் அதில் இருக்கும் நச்சு குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு கேடுதான்.

மழை காலத்தில் கண்டிப்பாக கொசுவிலே பயன்படுத்துங்கள். பெட்ஷீட் ,கனமான போர்வை போன்றவற்றை பயன்படுத்துங்கள். 

குழந்தைகளுக்கு கை கால் மறைக்கும் ஆடைகளை இரவு அணிவியுங்கள்.

இதையும் படிங்க:  இதை செய்தால் போதும்... இனி உங்கள் குழந்தை இருட்டு கண்டு பயப்படாது..!!

click me!