1). ஐஸில் வைக்கும் மீன்கள் இரண்டு நாட்களுக்கு மேல் வைத்தால் நல்லதல்ல. அந்த மீன்களை கவனித்து வாங்க வேண்டும். அதற்கு மீனின் செவுளை பார்க்க வேண்டும். மீன் கெட்டுப் போகவில்லை எனில் அவை சிவப்பு நிறமாக இருக்கும். கெட்டுப் போன மீன்களில் வெளிர் நிறமாக காணப்படும்.
2). செவுள் நிறம் மாறாமல் இருக்க சிலர் ரசாயனம் பூசலாம். ஐஸில் வைப்பதால் கூட செவுள் நிறம் மாறலாம். இந்த மாதிரி நேரங்களில் மீனின் உடல் விறைப்பாக இருக்கிறதா என ஆராய வேண்டும். அப்படி மீன் உடல் தொளதொளவென இல்லாமல் உறுதியாக இருந்தால் வாங்கலாம்.
3). செவுளைப் பிளக்கும்போது அங்கு விரல்களை வைத்து தொட்டால் பிசின் போல அங்கு கொழகொழப்பாக இருக்கும். கையில் பிசுபிசுப்பு வந்தால் அது ஃபிரெஷ் மீன் தான். சந்தேகம் வேண்டாம்.
4). மீனின் கண்கள் உயிர்ப்புடன் இருக்க வேண்டும். அதாவது தெளிவாக நம்மை பார்ப்பது போல இருந்தால் நல்ல மீன். ரத்த நிறம், மங்கிய நிறம், உப்பிய கண்கள் இருக்கும் மீன்கள் ரொம்ப நாள் ஐஸில் வைக்கப்பட்டவையாகும்.
5). ரசாயனம் பூசியுள்ள மீன்களின் மீது மருந்து வாசனை வரும். அதனால் கொஞ்சம் மூக்கை பயன்படுத்துங்கள்.
6). மீனை தலையை பிடித்து தூக்கினால் அதன் வால்பகுதி விறைப்பாக நிற்க வேண்டும். அப்படியில்லாமல் கீழே நோக்கி தொளதொளவென தொங்கினால் கெட்டுப்போன மீன் என்று அர்த்தம். நல்ல மீன் தலைப்பகுதியைத் தூக்கினால் விறைப்பாக இருக்கும்.
7). சில மீன்களின் செவுள் வெளிறி இருந்தாலும் அவை நல்ல மீனாக இருக்க வாய்ப்புள்ளது. அவற்றை அறிய உடல், வால், கண் ஆகியவற்றை பார்க்க வேண்டும்.