மின்னலின் போது எதை தவிர்க்க வேண்டும்?
மின்னலின் போது கட்டாயம் தண்ணீரை பயன்படுத்தக் கூடாது.
மின்னணு சாதனங்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். தொலைகாட்சி பார்ப்பதும் தவிர்க்கப்பட வேண்டும்.
இடியுடன் மழை பெய்தால் பிளக் போர்டில் செருகப்பட்ட மின்னணு சாதனங்களை முதலில் பயப்படுத்தக் கூடாது. அதாவது கணினி, தொலைபேசி, டிவி, கேமிங், வாஷிங் மிஷின், மொபைல் சார்ஜிங், மின்
அடுப்புகளை பயன்படுத்தக் கூடாது.
இடியுடன் மழை பொழியும்போது வீட்டின் ஜன்னல் அருகே நிற்கவோ அமரவோ கூடாது. கதவுகள் அருகிலும் போகக் கூடாது.
சிமெண்ட் பூச்சு செய்யப்படாத கான்கிரீட் போடப்பட்ட சுவர்களில் உலோக கம்பிகள் இருக்கும். இதன் வழியே மின்சாரம் செல்ல முடியும் என்பதால் கான்கிரீட் தளங்கள் அல்லது சுவர்களில் அமர்வதை தவிர்க்க வேண்டும்.
இடியுடன் கூடிய மழை பெய்யும் என முன்னெச்சரிக்கைகள் வானிலை ஆய்வு மையத்தில் இருந்து வெளியானால் வீட்டை விட்டு வெளியேறுவதை தவிர்க்கவும்.