Suriyan Peyarchi 2022 Palangal: சூரிய கிரகத்தின் மூன்றாவது பெயர்ச்சி ஆகஸ்ட் 17, 2022 தேதி அன்று நடக்கும். இதனால், சில ராசிக்காரர்களுக்கு அதிகப்படியான பலன் கிடைக்கும். அந்த அதிர்ஷ்டக்கார ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
ஜோதிடத்தின் பார்வையில், பொதுவாக கிரகங்களின் இட மாற்றங்கள் ஒருவரது வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அதன்படி ஆகஸ்ட் மாதம் கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் நிலையைப் பொறுத்தவரை சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. அதன்படி, இந்த ஆகஸ்ட் மாதத்தில் பல முக்கிய கிரகங்களின் பெயர்ச்சிகள் நடைபெறுவதால், பலரது வாழ்க்கையில் பெரிய மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது.
அதன்படி,16 ஜூலை 2022, சனிக்கிழமை, சூரியன் கடக ராசிக்குள் நுழைந்தார். ஆகஸ்ட் 17 வரை அவர் இந்த ராசியில் இருப்பார். கடக ராசியில் சூரியன் பெயர்ச்சி ஆனதால் சில ராசிக்காரர்களுக்கு அதிகப்படியான பலன் கிடைக்கும். அந்த ராசிகள் யார் என்பதை பற்றி இந்த பதிவில் காணலாம்.
சூரியன் ரிஷப ராசியில் மூன்றாவது வீட்டில் பெயர்ச்சியாகியுள்ளார். இந்த மாற்றத்தால் தொழிலில் நல்ல வெற்றி கிடைக்கும். இந்த நேரத்தில் பல விஷயங்களில் சரியான முடிவுகளை எடுப்பீர்கள். பண வரவுகள் அமோகமாக இருக்கும். கிரகங்களின் ராசி மாற்றம், நல்ல வேலை கிடைக்கும். உங்களுக்கு எதிர்பாராத திடீர் மாற்றம் ஏற்படும். கணவன் மனைவிக்குள் இருக்கும் நெருக்கம் அதிகரிக்கும்.
35
Suriyan Peyarchi 2022
சிம்மம்:
சிம்ம ராசியின் ஆவது வீட்டில் சூரியன் பெயர்ச்சியாகியுள்ளார். இந்த நேரத்தில் வெளியூர் பயணம் செல்லக்கூடும். இந்த பயணங்களால் அதிகப்படியான லாபத்தை அனுபவிப்பீர்கள். வியாபாரிகள் தங்கள் விருப்பப்படி லாபம் பெறலாம். இந்த காலகட்டத்தில் உங்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். உங்கள் குடும்ப உறுப்பினர்களுடனான உறவு வலுவாக இருக்கும். இது உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும்.
45
Suriyan Peyarchi 2022
கன்னி:
சூரியன் கன்னி ராசிக்கும் வீட்டில் சஞ்சரித்துள்ளார். சூரிய பகவானின் அருளால் கன்னி ராசிக்காரர்களுக்கு வருமானம் கூடும். உத்தியோகத்தில் சாதகமான பலன்கள் காணப்படும். வாழ்வில் அதிர்ஷ்டம் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது. இந்த நேரத்தில் நீங்கள் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுவீர்கள். திருமண யோகம் கைகூடும்.
கிரகங்களின் நிலை துலாம் ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் சாதகமான மாற்றங்களை ஏற்படுத்தும். இந்த காலகட்டத்தில் நீங்கள் நிதி முன்னேற்றம் அடையலாம். இதனுடன், அரசு வேலை செய்பவர்கள் அலுவலகத்தில் பாராட்டு பெறலாம். பணி நடை மேம்படும்.சொத்து சம்பந்தமான வழக்குகள் உங்களுக்கு சாதகமாக அமையும். இந்த நேரத்தில் உங்கள் குடும்ப சூழ்நிலை இனிமையாக இருக்கும்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.