Guru Peryarchi Palangal (குரு பெயர்ச்சி) 2022: குருவின் ராசி மாற்றம் காரணமாக அடுத்த, 4 மாதங்கள் எந்தெந்த ராசிகள் மகிழ்ச்சி கடலில் நீந்துவார்கள் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து வைத்து கொள்வோம்.
ஜோதிடத்தின் படி, குரு பகவான் அல்லது வியாழன் கிரகம் மிகவும் முக்கிய இடம் உண்டு. அறிவுத்திறன் மற்றும் நல்லொழுக்கத்தின் காரணியான குரு பகவான் தனது ராசியை மற்ற 13 மாதங்கள் எடுத்து கொள்கிறார். மேலும், குரு பகவானின் வியாழன் கிரகம் தனுசு மற்றும் மீனம் ஆகிய இரண்டு ராசிகளின் அதிபதியாக கருதப்படுகிறது. அந்தவகையில் கடந்த ஜூலை 29 ஆம் தேதி மீனத்தில் வக்ர நிலையில் குரு பகவான் பெயர்ச்சி ஆனார். இதையடுத்து, குரு பகவான் அடுத்த 4 மாதங்களுக்கு அதாவது நவம்பர் 24 வரை இதே ராசியில் தான் இருப்பார். இதனால் எந்தெந்த ராசிகள் சிறப்பான பலன்கள் உண்டாகும் என்பதை பார்ப்போம்.
வியாழன் கிரகம் கடக ராசியின் ஒன்பதாம் வீட்டில் சஞ்சரித்துள்ளது. இது அதிர்ஷ்டம் மற்றும் வெளிநாட்டு பயணத்தின் வீடாக கருதப்படுகிறது. இதன் மூலம் இவர்கள் வேலையில் பதவி உயர்வுக்கான பலனைப் பெறலாம். இதன் போது இந்த ராசிக்காரர்களின் தலைவிதியே மாறும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். வியாபாரத்தில் அமோக லாபம் கிடைக்கும்.
குருவின் பிற்போக்கு நிலை காரணமாக கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த நேரத்தில் வியாபாரத்தில் அமோக லாபம் பெறுவார்கள். அதேபோல் முதலீடு செய்வதற்கு சாதகமான காலம் இதுவாகும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். மனைவிக்கு கணவனின் முழு ஆதரவு கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். முக்கிய முடிவுகளை எடுப்பதில் பெற்றோரின் ஆலோசனை கிடைக்கும்.
மீன ராசியில் குருவின் நிலை சிறந்த பலனைத் தரும். தொழில் மற்றும் பணியிடத்தில் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். ஏற்கனவே செய்த முதலீடுகளில் நல்ல லாபம் கிடைக்கும். குடும்பம் மற்றும் மனைவியின் ஆதரவைப் பெறுவீர்கள். இந்த நேரத்தில் இவர்கள் வியாபாரத்தில் அமோக லாபம் பெறுவார்கள். இதனுடன், அவர்களின் வருமானம் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளன.