Suriyan Peyarchi2022: சூரியன் அருளால் அடுத்த இரண்டு வாரம் முழுவதும்...இந்த ராசிகளுக்கு முழு பலன் உண்டு..

First Published Sep 5, 2022, 3:03 PM IST

Suriyan Peyarchi Palangal 2022: சூரியன் அருளால் அடுத்த இரண்டு வாரம் முழுவதும், இந்த ராசிகளுக்கு சிறப்பான யோகம் காத்திருக்கிறது.அவை எந்தெந்த ராசிகள் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து வைத்து கொள்வோம்.

Sun transit

சூரியன் பெயர்ச்சி 2022: கிரகங்களின் ராஜாவான சூரியன் தன்னுடைய சொந்த ராசியான சிம்ம ராசியில் இருக்கிறார். இவர் வரும், செப்டம்பர் 17 வரை அவர் சிம்மம் ராசியில் இருப்பார்.இதனால் குறிப்பிட்ட ராசிகளுக்கு சூரியனின் அருளால் செல்வம், மகிழ்ச்சி, செழிப்பு, ஐஸ்வர்யம் அனைத்தும் கிடைக்கும். இவர்களுக்கு எந்த வித பிரச்சனையும் இருக்காது. சிம்ம ராசியில் சூரியனின் சஞ்சாரம் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். எனினும், சில குறிப்பிட்ட ராசிகளுக்கு அடுத்து  இரண்டு வாரம் முழுவதும் அனுகூலமாக இருக்கும். அந்த அதிர்ஷ்டக்கார ராசிகள் யார் என்பதை பற்றி இந்த பதிவில் காணலாம்.

 மேலும் படிக்க...Vastu tips: உப்பு ஜாடியில் இனி இந்த ஒரு பொருளை போட்டு வைத்தால் போதும்..உங்களுக்கு திடீர் பண வரவு இருக்கும்.. 

Sun transit

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு அடுத்த இரண்டு வாரம், மங்களகரமானதாக இருக்கும். வியாபாரத்தில் லாபம் அடைவார்கள். வாழ்வில் மனம் அமைதியாக இருக்கும். பணப்பிரச்சினை உள்ளவர்களுக்கு நண்பர்களிடமிருந்து பண உதவி கிடைக்கும். இந்த காலகட்டத்தில் உங்கள் பேச்சால் மற்றவரை கவர்ந்து விடுவீர்கள். உங்கள் பணிகள் சுலபமாக முடியும். தொழிலதிபர்கள் சகோதர சகோதரிகளின் ஒத்துழைப்பால் ஆதாயம் அடைவார்கள்.

 மேலும் படிக்க...Vastu tips: உப்பு ஜாடியில் இனி இந்த ஒரு பொருளை போட்டு வைத்தால் போதும்..உங்களுக்கு திடீர் பண வரவு இருக்கும்..

sun transit 2022

சிம்மம் 

சிம்ம ராசிக்காரர்களுக்கு சூரியன் அருளால் இந்த காலம் மிகவும் நல்ல காலமாக இருக்கும். வியாபாரம் பெருகும். வியாபாரம் செய்பவர்களுக்கு சகோதர சகோதரிகளின் உதவி கிடைக்கும். உங்களது இனிமையான குரலால் மக்கள் ஈர்க்கப்படுவார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கணவன், மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். அமைதியான சூழல் நிலவும். பணியிடத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும்.

sun transit 2022

விருச்சிகம்

சிம்மத்தில் சூரியன் இருப்பதால் விருச்சிக ராசிக்காரர்கள் நம்பிக்கையுடன் இருப்பார்கள். வருமானம் அதிகரிக்கும். பெற்றோருடன் நேரத்தை செலவிட முடியும். நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். இந்த காலத்தில், உங்களுக்கு ​​நல்ல செய்திகள் கிடைத்து மனதுக்கு மகிழ்ச்சி ஏற்படும். கணவன் மற்றும் மனைவி இடையேயான உறவு இனிமையாக இருக்கும். மாணவர்களுக்கு தேர்வுகளில் நல்ல வெற்றி கிடைக்கும்.

 மேலும் படிக்க...Vastu tips: உப்பு ஜாடியில் இனி இந்த ஒரு பொருளை போட்டு வைத்தால் போதும்..உங்களுக்கு திடீர் பண வரவு இருக்கும்..

click me!