ஆம் ஆயூர்வேதம் மற்றும் வேதங்களின் கூற்றுப்படி, உணவை கைகளால் சாப்பிடுவது வித்தியாசமான சுவையையும் மகிழ்ச்சியையும் தருகிறது என்கிறார்கள்.
நாம் கைகளால் உணவை உண்பதன் மூலம், வயிற்றில் உள்ள கூறுகள் செரிமான செயல்முறையை துரிதப்படுத்துகின்றன மற்றும் உணவு எளிதில் ஜீரணமாகும். மேலும் உணவை ரசித்து ருசித்து உண்பதற்கு வைக்கும்.
ஆயுர்வேதத்தின் படி, கையால் உணவை உண்பவர்களுக்கு விரைவில் பசி ஏற்படாது. கைகளால் உணவு உண்பதால் வயிறு எளிதில் நிறைகிறது. இதனால், உங்களுக்கு, மதிய உணவுக்குப் பிறகு இரவு வரை லேசான உணவுகளே போதுமானது. இது எடையைக் குறைக்க உதவுகிறது. இருப்பினும், உணவு உண்பதற்கு முன் கைகளை நன்றாகக் கழுவுவது மிகவும் அவசியம்.
நிபுணர்களின் கூற்றுப்படி, ஸ்பூன் மூலம் நம்முடைய உணவை விரைவாக சாப்பிடுகிறோம். இது சர்க்கரையின் சமநிலையை சீர்குலைத்து, நீரிழிவு (டைப்-2) அபாயத்தை குறைக்கிறது. மேலும், டைப் 2 நீரிழிவு நோயாளிகள் பெரும்பாலும் ஸ்பூன் ஃபோர்க் சாப்பிடுபவர்கள் என்றும் ஒரு ஆய்வு கண்டறிந்துள்ளது. ஆனால் உணவை ஸ்பூன் மற்றும் போர்க்கில் சாப்பிடும் போது, இந்த நன்மைகள் கிடைப்பதில்லை.
கைகளால் உணவு உண்பதன் மற்றொரு நன்மை என்னவென்றால், உணவின் சூட்டினை அறிந்து கொள்ள முடியும். கையால் உணவு உண்ணும் போது, உணவு எவ்வளவு சூடாக இருக்கிறது என்பது தெரியும். ஆனால், ஸ்பூன் கொண்டு சாப்பிடும் போது, அது நமக்குத் தெரியாது.