பிரியமானவரின் அருகாமை இல்லாத நாள்களில் அவர்கள் பரிசளித்த டெடி பியர் தான் அந்த தனிமையை போக்கும். அதனால் தான் காதலர்கள் டெடி பியரை காதலிக்கு வாங்கி கொடுக்கிறார்கள். டெடி பியர் பொம்மைகள் பார்க்க அழகாகவும், வண்ணமயமாகவும் இருக்கும் என்பதால் பெண்களுக்கு உள்ளம் கவர் பரிசு பொருளாகவே மாறிவிட்டது. டெடி பியரை காதல் துணைக்கு மட்டுமல்ல, குழந்தைகள், பெற்றோர் அல்லது அன்புக்குரியவர் எவருக்கும் சிறந்த பரிசாக கொடுக்க முடியும். ஏனென்றால் டெடி பியர் அரவணைப்பு, அக்கறை, உடனிருக்கும் உணர்வை கொடுக்கும் என நம்பப்படுகிறது. ஆனாலும் டெடி பியர் உருவாக காரணமாக இருந்த கதை தெரியுமா?