வீட்டிற்குள் காற்று தேங்கி நின்றால் அனல் அதிகமாகத் தெரியும். அதிகாலை மற்றும் மாலை வேளைகளில் ஜன்னல் மற்றும் கதவுகளைத் திறந்து வைத்து, காற்று தடையின்றி வீட்டிற்குள் வந்து செல்ல வழிவகை செய்யுங்கள்.
உடைகளிலும் கவனம்
செயற்கை இழைத் துணிகளைத் தவிர்த்து, காற்றோட்டமான பருத்தி (Cotton) ஆடைகளை அணியுங்கள். படுக்கை விரிப்புகளும் பருத்தியால் ஆனதாக இருந்தால் வியர்வையை உறிஞ்சி, உடல் குளிர்ச்சியாக இருக்க உதவும்.
பசுமை மற்றும் ஈரப்பதம்
உள்அரங்கு தாவரங்கள்: சோற்றுக்கற்றாழை, ஸ்நேக் பிளான்ட், அரேகா பாம் போன்ற செடிகள் காற்றில் ஈரப்பதத்தை ஏற்படுத்தி வெப்பத்தைத் தணிக்கின்றன.
தரை துடைத்தல்: மதிய நேரங்களில் குளிர்ந்த நீரால் தரையைத் துடைப்பது, தரையில் உள்ள வெப்பத்தை நீக்கி அறையின் வெப்பநிலையைக் குறைக்க உதவும்.