ஜோதிடத்தின் பார்வையில், ஒவ்வொரு கிரகங்களும் ஒவ்வொரு விதமான மாற்றத்தை ஏற்படும். இந்த கிரகங்களின் இயக்கம் அனைத்து 12 ராசிக்காரர்களையும் பாதிக்கிறது. ஜோதிடத்தில் சுக்கிரனுக்கு தனி இடம் உண்டு. சுக்ரன் கிரகம் ஆடம்பர வாழ்க்கை, திருமண வாழ்க்கை, காதல், அழகு, ஆகியவற்றின் காரணியாகும்.
ஒருவரது ஜாதகத்தில் சுக்கிரன் சுப நிலையில் இருக்க வேண்டும். அசுப நிலையில் இருந்தால், வறுமையில் வாழும் நிலை ஏற்படும். கடந்த செப்டம்பர் 24-ம் தேதி சுக்கிரன் கன்னி ராசியில் பிரவேசிக்கிறார். இந்த சுக்கிரன் ராசி மாற்றத்தால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலன் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.
35
Venus Transit
மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் பெயர்ச்சி சிறப்பான பலன்களை தரும். உங்களுக்கு உடன் பிறந்தவர்கள் மற்றும் நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். உங்களின் ஒரு புதிய வேலை அல்லது புதிய தொழில் தொடங்கப் போகிறீர்கள் என்றால், அதற்கு இதுவே சிறந்த நேரமாகும். இந்த நேரத்தில் உங்களின் திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். வேலையில் வெற்றி பெறுவீர்கள். பொருளாதார நிலை வலுவாக இருக்கும். நண்பர்களின் ஆதரவைப் பெறுவீர்கள்.
சிம்ம ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் ராசி மாற்றம் பெரிய அளவில் அதிர்ஷ்டத்தை சேர்க்கும். வியாபாரத்தில் லாபம் உண்டாகும். பணியிடத்தில் உங்கள் பணி பாராட்டப்படும். மனைவியுடன் நேரத்தை செலவிடுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கும் இந்த நேரம் சாதகமாக இருக்கும். ஆன்மீக காரியங்களில் ஈடுபடும் வாய்ப்பு கிடைக்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்களின் முழுமையான ஆதரவு கிடைக்கும். சொத்துக்களால் ஆதாயம் பெறலாம்.
55
Sun and Venus Transit
துலாம்:
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த நேரம் மங்களகரமானதாக இருக்கும். உங்களுக்கு ஆன்மீக காரியங்களில் ஈடுபடும் வாய்ப்பு கிடைக்கும்.தொழில், வியாபாரத்தில் லாபம் உண்டாகும். உங்கள் பணி பாராட்டப்படும். பண ஆதாயம் இருக்கும், இது நிதி சிக்கள் தவிர்க்கப்படும். மனைவியுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுவீர்கள். உங்களின் உடல்நிலை சிறப்பாக இருக்கும். ஆரோக்கியம் மேம்படும்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.