அசைவ உணவுகளில் மீன் கறிக்கு இருக்கும் நறுமணமும் சுவையும் வேறு எதற்கும் ஈடாகாது. குறிப்பாக, காரைக்குடி மற்றும் செட்டிநாட்டு பகுதிகளில் பாரம்பரிய சமையல் முறையில் தயாரிக்கப்படும் மீன் குழம்பு, அதன் அடர்த்தியான கிரேவி பதம் மற்றும் நாவைத் தூண்டும்.
செட்டிநாட்டுச் சமையல் என்றாலே அதன் தனித்துவமான நறுமணமும், நாவை அடிமையாக்கும் காரசாரமான சுவையும் தான் நினைவிற்கு வரும். வழக்கமாகச் செய்யப்படும் மீன் குழம்புகளில் இருந்து மாறுபட்டு, வறுத்து அரைத்த பிரத்யேக மசாலாக்களின் சேர்க்கையோடு தயாரிக்கப்படும் செட்டிநாடு மீன் கிரேவி, உணவப்பிரியர்களின் இதயத்தைக் கவரும் ஒரு அற்புத உணவுப் படைப்பாகும். மீனின் மென்மை கெடாமலும், மசாலாவின் காரம் மீனின் ஒவ்வொரு துண்டிலும் ஆழமாக இறங்கும் வகையிலும் பாரம்பரிய முறையில் இந்த உணவை எப்படித் தயாரிப்பது? அதே செட்டிநாட்டு சுவையில் நம் வீட்டிலும் ஃபிஷ் கிரேவி செய்து பார்க்கலாம்.
27
வறுத்து அரைக்கும் ரகசிய மசாலா :
செட்டிநாட்டுச் சுவையின் ரகசியமே மசாலாவை உடனுக்குடன் வறுத்து அரைப்பதில் தான் உள்ளது. வரக்கொத்தமல்லி, காய்ந்த மிளகாய், சீரகம், சோம்பு, மிளகு ஆகியவற்றுடன் சிறிதளவு கல்பாசி மற்றும் சோம்பு சேர்த்து மிதமான தீயில் வறுத்து, பொடி செய்யாமல் விழுதாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
37
சின்ன வெங்காயம் மற்றும் பூண்டின் பங்கு :
இக்கறிக்கு நறுக்கிய பெரிய வெங்காயத்திற்குப் பதிலாக, தோலுரித்த சின்ன வெங்காயம் மற்றும் பூண்டை முழுதாகப் பயன்படுத்துவது நறுமணத்தைக் கூட்டும். நல்லெண்ணெயில் பூண்டு மற்றும் சின்ன வெங்காயம் பொன்னிறமாக வதங்கும் போது வெளிப்படும் நறுமணமே இக்கறியின் அடிப்படைச் சுவையாகும்.
பழைய புளியைக் கரைத்து ஊற்றுவது செட்டிநாட்டு மீன் குழம்பிற்குத் தனி நிறத்தையும் சுவையையும் தரும். புளிக்கரைசலுடன், புதிதாக அரைத்த மசாலா விழுதைச் சேர்த்துப் பச்சை வாசனை போக நன்கு கொதிக்க வைக்க வேண்டும். எண்ணெய் பிரிந்து மேலே வரும் பதம் மிகவும் முக்கியம்.
57
மீன் துண்டுகளைச் சேர்க்கும் பதம்
மசாலா நன்கு கொதித்து திக் ஆன பிறகு, தீயைக் குறைத்து நறுக்கிய மீன் துண்டுகளைச் சேர்க்க வேண்டும். மீன் சேர்த்த பிறகு கரண்டியால் அதிகமாகக் கிளறக் கூடாது. மிதமான தீயில் 5 முதல் 7 நிமிடங்கள் வரை மட்டுமே வேகவைப்பது மீன் உடையாமல் இருக்க உதவும்.
67
மணமூட்டும் தாளிப்பு மற்றும் மண் பாத்திரப் பயன்பாடு
இறுதியாகச் சிறிதளவு நல்லெண்ணெயில் கடுகு, வெந்தயம், சின்ன வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை தாளித்துக் கொட்ட வேண்டும். இந்த மீன் கிரேவியை மண் பாத்திரத்தில் சமைத்து, குறைந்தது இரண்டு மணி நேரம் கழித்துப் பரிமாறினால் அதன் சுவை பன்மடங்கு அதிகரிக்கும்.
77
கிரேவி திக்காக வர டிப்ஸ்
கிரேவி இன்னும் திக்காக வேண்டும், காரம் அதிகம் வேண்டாம் என்பவர்கள் மசாலா வறுத்து அரைக்கும் போலு அதில் சிறிதளவு தேங்காய் துருவல் ஒரு ஸ்பூன் சேர்த்து அரைத்து சேர்க்கலாம். அதன் சுவை இன்னும் தனித்துவமானதாக இருக்கும்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.