இந்த அழுகை வந்தால் ஜாக்கிரதை
புதிதாகப் பிறந்த குழந்தைகள் ஒரு நாளைக்கு இரண்டு முதல் மூன்று மணி நேரம் அழுவது இயல்பானது என ஆய்வுகள் கூறுகின்றன. ஒரு குழந்தை தினமும் 3.5 மணி நேரத்திற்கு மேல் அழ நேரிட்டால், மருத்துவ ஆலோசனை செய்யுங்கள். உங்களுக்கு தெரியுமா? குழந்தை பெருங்குடல் வலியால் அவதிப்பட்டால், வாரத்திற்கு மூன்று முறை, மூன்று மணி நேரத்திற்கும் மேலாக அழுவார்கள். இந்த அழுகை திடீரெனவும், அதிக ஒலியுடனும் இருக்கும்.
குழந்தை நோய்வாய்பட்டதால் அழுகுகிறார்கள் என்றால், முகம் சிவப்பாக மாறுவது, வயிறு உப்புவது, கால்களை உதைப்பது, வாயு பிரச்சனை, நெஞ்செரிச்சல் ஆகியவை வெளிப்படும். சில குழந்தைகள் காற்று விழுங்கியதால் அவதிப்படுவார்கள். ஒரு பெற்றோராக, அவர்களின் அசௌகரியத்தை குறைக்க முயற்சி செய்யுங்கள்.