குழந்தைகளுக்கு மன அமைதியை வழங்கும் தியானம் போன்ற எளிய மன உறுதிப் பயிற்சிகளை சொல்லிக் கொடுக்கலாம். எந்த அழுத்தமும் இன்றி அமைதியாக இருக்க அவர்களுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும். இப்படி மன உறுதியை தொடர்ந்து பயிற்சி செய்தால் அவர்களின் கவனம் மேம்படும். இது அவர்களுடைய பதட்டத்தைக் குறைக்கும்; உணர்ச்சி மேலாண்மைக்கு உதவும். சுயக் கட்டுப்பாடு, மன உறுதி போன்றவை வாழ்வில் அவர்களுக்கு சிறந்த அடித்தளமாக இருக்கும்.
மேலே சொல்லப்பட்டுள்ள விஷயங்களை பெற்றோர் சரியாக பின்பற்றினால், அவர்களின் குழந்தைகள் புத்திசாலியாகவும், உணர்வுகளை கையாள தெரிந்தவர்களாகவும் வளருவார்கள்