
பொதுவாகவே சமையலில் நாம் அதிகமாக பயன்படுத்தும் பொருட்களில் ஒன்று வெங்காயம். இது இல்லாமல் எந்த சமையலும் முழுமை அடையாது என்றே சொல்லலாம். சொல்லப்போனால் வெங்காயம் தான் நாம் தயாரிக்கும் உணவில் சுவையை கூட்டிக் கொடுக்கிறது. உங்களுக்கு தெரியுமா?இது சமையலுக்கு மட்டுமின்றி, ஆரோக்கியம் அழகு குறிப்புகள் போன்ற அனைத்திற்கும் பயன்படுத்தப்படுகிறது. அந்தவகையில், வெங்காயத்தை நாம் பயன்படுத்தும் போது அவற்றின் தோலை குப்பையில் வீசுவது வழக்கம். ஆனால், அதன் தோலில் பல நன்மைகள் நிறைந்துள்ளது தெரியுமா?
வெங்காயத் தோலில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் :
சொன்னால் நம்ப மாட்டீங்க, ஆனால் அதுதான் உண்மை. வெங்காயத் தோலில் எக்கச்சக்கமான சத்துக்கள் நிறைந்துள்ளது. உதாரணமாக, வைட்டமின் ஏ, ஈ, சி, கால்சியம், இரும்புச்சத்து, பொட்டாசியம், நார்ச்சத்து ஆக்ஸிஜனேற்றிகள் இன்னும் பல உள்ளன. இவை கண் ஆரோக்கியத்திற்கும், கூந்தலுக்கு மற்றும் சருமத்திற்கு ரொம்பவே நல்லது.
அதுமட்டுமின்றி, இதில் அலர்ஜி எதிர்ப்பு பாக்டீரியா எதிர்ப்பு ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் போன்றவை உள்ளது இதை ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தவும் கெட்ட கொழுப்பை குறைக்கவும் ஒவ்வாமை மற்றும் மனசில் எதிர்த்து போராடவும் பெரிதும் உதவுகிறது.
வெங்காயத் தோலின் நன்மைகள் :
சூப்பில் போட்டு குடிக்கலாம் : நீங்கள் உங்கள் வீட்டில் சூப்பு தயாரித்தால், அதில் வெங்காயத் தோலைப் போட்டு குடிக்கலாம். இதன் மூலம் வெங்காயத் தோலில் இருக்கும் சத்துக்கள் சூப்பில் இறங்கும்.
ரத்த அழுத்தத்தை குறைக்கும் : உங்களுக்கு உயர் ரத்த அழுத்தத்தை பிரச்சனை இருந்தால் வெங்காயத் தோலை சூடான தண்ணீரில் போட்டு, சுமார் 10 நிமிடம் கழித்து அந்த தண்ணீரை வடிகட்டி குடிக்கவும். இப்படி தொடர்ந்து குடித்து வந்தால் இரத்த அழுத்தம் கண்டிப்பாக குறையும்.
முடிக்கு டோனராகப் பயன்படுத்தலாம் : வெங்காயத் தோலை முடி பராமரிப்பில் பயன்படுத்தலாம். மேலும் இதை உலர்ந்த மற்றும் மந்தமான தலை முடிக்கு பயன்படுத்துவது ரொம்பவே நல்லது. இதற்கு வெங்காயம் தோலை தண்ணீரில் போட்டு, தண்ணீரின் நிறம் மாறும் வரை நன்கு கொதிக்க வைக்கவும். பிறகு அதை ஆற வைத்து, ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி பயன்படுத்துங்கள்.
நல்ல தூக்கம் வர : இரவில் உங்களால் நிம்மதியாக தூங்க முடியவில்லை என்றால் இரவு தூங்கும் முன் வெங்காயத்தோல் டீ போட்டு குடியுங்கள். இதற்கு சூடான நீரில் வெங்காயத் தோலைப் போட்டு 15 நிமிடம் அப்படியே வைத்துவிட்டு, பிறகு வடி கட்டி, அதனுடன் தேன் கலந்து குடிக்கவும் இப்படி குடித்தால், இரவில் நிம்மதியாக தூங்குவீர்கள்.
தோல் அரிப்பு நீக்க உதவுகிறது : வெங்காயத் தோலில் ஏற்கனவே பூஞ்சை காளான் பண்புகள் உள்ளது. எனவே, இவற்றை தோலில் தடவுவதன் மூலம் சருமத்தில் ஏற்படும் அரிப்புகள், தடிப்புகள் போன்றவற்றை சுலபமாக நீக்கலாம். அதுமட்டுமின்றி, வெங்காயத்தோலை தண்ணீரில் போட்டு ஊற வைத்து, பிறகு அந்த நீரை சருமத்தில் தடவினால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.
கொசுக்கள் மற்றும் ஈக்களை விரட்ட : வெங்காயத் தோலை தண்ணீரில் போட்டு, அவை வரும் ஜன்னல் பகுதியில் வைக்கவும். வெங்காயத் தோலில் இருந்து வரும் பூஞ்சை வாசனை கொசுக்கள் மற்றும் ஈக்களுக்கு பிடிக்காது. இதனால் அவை உங்கள் வீட்டிற்கு ஒருபோதும் வரவே வராது.