அனுஷ்கா ஷர்மா தன்னுடைய மகள் வாமிகாவின் புகைப்படங்களை ஏன் வெளியிடுவதில்ல என்பதற்கு இன்ஸ்டாகிராமில் பதிலளித்தார். அதில், தங்கள் குழந்தைக்கு தனியுரிமையை (privacy) நாடுவதாகவும், ஊடகங்கள், சமூக ஊடகங்களில் இருந்து தனித்து அவள் சுதந்திரமாக வாழ வாய்ப்பளிக்க தங்களால் முடிந்த அனைத்தையும் செய்ய விரும்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார். அவள் பெரியவள் ஆன பிறகு அவளை எங்களால் கட்டுப்படுத்த முடியாது. எனவே உங்கள் ஆதரவு தேவை என நடிகையும், விராட் கோலியின் மனைவியுமான அனுஷ்கா ஷர்மா தெரிவித்துள்ளார்.