- குளிர்ச்சியான அல்லது ஈரப்பதமான இடங்களில் தான் கரையான் வேகமாக வளரும். எனவே வீட்டுக்குள் சூரிய ஒளி படும்படி வீட்டின் கதவு ஜன்னல்களை சிறிது நேரம் திறந்து வையுங்கள்.
- மர சாமான்கள் ஈரமாக இருந்தால் வெயில் அடிக்கும் போது அவற்றை உலர வைக்கவும்.
- மர சாமான்களை அவ்வப்போது சோதிக்கவும். கரையான் பாதிப்பு ஏதேனும் உள்ளதா என்று பார்க்க வேண்டும்.
- சுவர்களில் ஏதேனும் துளைகள் இருந்தால் அவற்றை அடைத்தால் கரையான்கள் வருவதை தடுக்கலாம்.
- வீட்டை எப்போதும் சுத்தமாக வைத்திருங்கள். இதனால் கரையான் வருவது தடுக்கப்படும்.