முடி சம்பந்தமான பிரச்னைகளை சரிசெய்வதில் கறிவேப்பிலை முக்கிய பங்கு வகிக்கிறது. குறிப்பாக, கறிவேப்பிலையில் இயற்கையான மெலனின் நிறமி அதிகமா இருக்கு. இது இளம் வயதில் முடி நரைக்கும் பிரச்னையை சரிசெய்ய உதவுது. உங்களுக்கு வேப்ப இலை ஹேர் மாஸ்க் செய்ய நேரமில்லை என்றால், நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் வேப்ப இலை எண்ணெய் வாங்கி தலையில் மசாஜ் செய்யலாம். இது பொடுகு, முடி உதிர்வு, நரை முடி பிரச்னைகளை குறைக்கும்.
இதை எப்படி செய்வது?
முதலில் ஒரு சிறிய ஸ்டீல் பாத்திரத்தில் மூன்று முதல் நான்கு டேபிள்ஸ்பூன் தேங்காய் எண்ணெய் ஊற்றி, இரண்டு நிமிடம் சூடுபடுத்துங்கள்.
எண்ணெய் சூடானதும், சில காய்ந்த வேப்ப இலைகளை பொடித்து எண்ணெயில் போட்டு, சிறிது நேரம் சூடாக விடுங்கள். வேப்பிலை மற்றும் கறிவேப்பிலை பொடி கருப்பாக மாறும். இப்போது அடுப்பை அணைத்துவிட்டு, எண்ணெயை சிறிது நேரம் ஆறவிடுங்கள். பிறகு இந்த எண்ணெயை தலையிலும், முடியின் வேர்களிலும் சமமாக தடவி, இரண்டு கைகளாலும் நன்றாக மசாஜ் செய்யுங்கள். இந்த எண்ணெயை தலையின் எல்லா பகுதிகளிலும் தடவி, ஐந்து நிமிடம் மசாஜ் செய்து, பிறகு ஒரு ஹேர் கேப் போட்டுக்கொள்ளுங்கள். இரவு முழுவதும் அப்படியே விட்டுவிட்டு தூங்குங்கள். மறுநாள் காலையில், ஹெர்பல் ஷாம்பு பயன்படுத்தி தலையை அலசுங்கள்.