இந்த கொப்புளம் வலி அல்லது அரிப்புடன் இருக்கலாம்.. சொறி குணமான பிறகு, இந்த கொப்புளங்கள் உலர்ந்து, மேலோட்டமாக உருவாகி, இறுதியில் உதிர்ந்துவிடும். புண்கள் அல்லது கொப்புளங்களின் எண்ணிக்கை நோயாளிக்கு நோயாளி வேறுபடலாம். சிலருக்கு நூற்றுக்கணக்கான கொப்புளங்கள் இருக்கலாம், அதே நேரம் சிலருக்கு சில கொப்புளங்கள் மட்டுமே ஏற்படலாம். அவை உடலில் எங்கு வேண்டுமானாலும் தோன்றும், அதாவது இடுப்பு, பிறப்புறுப்புப் பகுதிகள், உள்ளங்கைகள் மற்றும் உள்ளங்கால்கள், முகம், வாய் அல்லது தொண்டை என எந்த பகுதியில் வேண்டுமானாலும் தோன்றலாம்.
புண்கள் ஆறாமல், தோலில் புதிய அடுக்கு உருவாகாமல் இருந்தால் மற்றவர்களுக்கு நோய் பரவும் வாய்ப்பு உள்ளது. இருப்பினும், சில நோயாளிகளுக்கு எந்த அறிகுறிகளையும் காட்டாமல் இருக்கலாம். அத்தகைய சந்தர்ப்பங்களில் தகவல் குறைவாக உள்ளது.