Guru Peyarchi 2022 Palangal: குருவின் பின்னடைவு காரணமாக, இந்த 3 ராசிக்காரர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அவை எந்தெந்த ராசிகள் என்பதை பார்ப்போம்.
ஜோதிடத்தின் படி, குரு பகவான் அல்லது வியாழன் கிரகம் ஒரு முக்கியமான கிரகமாக கருதப்படுகிறது. இவர் 12 ஆண்டுகளுக்குப் பிறகு, தனது சொந்த ராசியான மீனத்தில் வக்ர நிலையில், அதாவது பிற்போக்கு நிலையில் உள்ளார். இவர் வரும் நவம்பர் 24 ஆம் தேதி வரை அவர் பிற்போக்கு நிலையில் இருப்பார். இதன் விளைவு மனித வாழ்க்கையில் சுபமாகவும், அசுபமாகவும் கருதப்படுகிறது. குறிப்பாக இந்த 3 ராசிகளுக்கு இதன் தாக்கம் அசுபமாக இருக்கும் எனவே, எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய ராசிகள் பற்றி பார்ப்போம்.
கடக ராசிக்காரர்களுக்குகுருவின் மாற்றம் செலவுகளை அதிகரிக்கும். எந்த விஷயத்திலும், ஜாக்கிரதையாக இருக்கவும். குடும்பத்தில் செலவுகள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் குறைபாடு இருக்கலாம். வறுத்த உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்கவும். பொருளாதார இழப்பு ஏற்பட வாய்ப்பில்லை. ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள்.வெளியூர் பயணம் தவிர்த்தல் வேண்டும்.
கன்னி ராசிக்காரர்கள் இந்த நேரம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். தேவையற்ற செலவுகள் வந்து உங்களைத் தொந்தரவு செய்யும். உறவுகள் மோசமடையக் கூடும். குறிப்பாக இந்த காலத்தில் உங்களுக்கு தொழிலில் லாபம் அதிகரிக்கும். நீங்கள் தேவையற்ற விஷயங்களை மிகவும் கவனமாகக் கையாளுங்கள். காதல் வாழ்க்கையிலும் குழப்பங்கள் ஏற்படலாம்.
44
Guru Peyarchi 2022 Palangal:
துலாம்:
துலாம் ராசிக்காரர்கள் வாழ்க்கையின் பல துறைகளில் சவால்களை சந்திக்க நேரிடும். சில கெட்ட செய்திகள் கவலை தரலாம். எதிரிகள் சுறுசுறுப்பாக இருப்பார்கள். கடினமாக உழைத்தாலும் பலன் கிடைக்காது. எதிலும், பொறுமையாக இருங்கள்.வேலையில் சிரமங்கள் இருக்கலாம். உறவினர்களிடையே மனஸ்தாபம் ஏற்பட்டு பிரச்சனைகள் வரக்கூடும்.