இக்கிராமத்தில் உள்ள வீடுகள் அனைத்திலும் மின்சாரம் முற்றிலுமாக தவிர்க்கப்பட்டு மண்ணென்ணை மற்றும் சூரிய ஒளி விளக்குகள் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. இவை அனைத்திற்கும் உச்சமாக கிராமத்தில் மது, பீடி, சிகரெட், சினிமா, டிவி ஆகியவை முற்றிலுமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. இங்கு வாழும் மக்கள் அனைவரும் மெய்வழி மதத்தைத் தழுவிய நிலையில் தீபாவளி, ரம்ஜான், கிருஸ்துமஸ் என எந்த பண்டிகையையும் கொண்டாடுவது கிடையாது. இயற்கைக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பொங்கல் பண்டிகையை மட்டும் கோலாகலமாகக் கொண்டாடி வருகின்றனர்.