மழைக்காலம் ஆரம்பமாகிவிட்டாலே கொசுக்களின் தொல்லையும் வந்துவிடும். ஏனெனில் மழையின் காரணமாக தேங்கியிருக்கும் நீரால் கொசுக்கள் அதில் தங்கி காய்ச்சல், டெங்கு, மலேரியா, வயிற்றுப்போக்கு போன்ற அபாகரமான நோய்களை ஏற்படுத்தும். இத்தகைய சூழ்நிலையில், கீழே கொடுக்கப்பட்டுள்ள ஐந்து செடிகளை மட்டும் வீட்டில் வளருங்கள். ஒரு கொசு கூட வீட்டிற்குள் வராது. அதுமட்டுமின்றி, அந்த செடிகள் கொசுக்களை வீட்டிலிருந்து விரட்டுவது மட்டுமல்லாமல், ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளையும் வழங்கும். அவை என்னென்ன செடிகள் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.