பூண்டு பால் நன்மைகள்:
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்
பூண்டில் ஆன்டிவைரஸ் பண்புகள். மேலும் இது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது என்று ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. எனவே மழைக்காலங்களில் குழந்தைகளுக்கு சளி, இருமல், காய்ச்சல் வருவதை தடுக்க பூண்டு பால் கொடுங்கள்.
மேலும் குழந்தைகளுக்கு சளி, இருமல் இருந்தால் கூட பூண்டு பால் கொடுக்கலாம். ஏனெனில் பால் அவர்களை நீரேற்றமாக வைத்திருக்கும். அதுபோல பாலில் கால்சியம், பொட்டாசியம், சோடியம், மெக்னீசியம், துத்தநாகம் மற்றும் அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கச் செய்யும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன. எனவே, குழந்தைகளுக்கு தினமும் ஒரு கப் பூண்டு பால் கொடுத்தால் அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, எந்த ஒரு நோய்களும் அவர்களது செல்களில் நுழைவதை தடுக்க உதவுகிறது.