சமையல் முடிந்ததும், அடுப்பை மட்டும் அணைக்காமல், சிலிண்டரின் ரெகுலேட்டரையும் அணைப்பது நல்ல பழக்கமாகும். மேலும், பாத்திரங்களை மூடி வைத்து சமைப்பது, பிரஷர் குக்கரை பயன்படுத்துவது, பர்னர்களை சுத்தமாக வைத்திருப்பது போன்ற பழக்கங்கள் எரிவாயு வீணாவதை குறைத்து, சிலிண்டரை சிக்கனமாக பயன்படுத்த உதவும்.
கேஸ் கசிவு இருப்பதாக சந்தேகம் ஏற்பட்டால், தீப்பெட்டி அல்லது லைட்டரை பயன்படுத்தக் கூடாது. அதற்கு பதிலாக, ஜன்னல்களைத் திறந்து காற்றோட்டம் ஏற்படுத்தி, ரெகுலேட்டரை அணைத்துவிட்டு, உடனடியாக எரிவாயு நிறுவனத்தை தொடர்புகொள்ள வேண்டும். இந்த எளிய பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம், கேஸ் சிலிண்டரை பாதுகாப்பாகவும், நீண்ட நாட்கள் சிக்கனமாகவும் பயன்படுத்த முடியும்.