- முக்கியமாக மாவு அரைக்கும் போது கைகளை பயன்படுத்தாமல் பிளாஸ்டிக் அல்லது மரக் கரண்டியை பயன்படுத்துங்கள். கைகளை பயன்படுத்தினால் உடல் சூட்டினால் மாவு சீக்கிரமாகவே புளிக்க ஆரம்பித்துவிடும்.
- மாவை அரைத்த பிறகு உப்பு போட்டு கலக்கி வைக்க கூடாது. உப்பு போடாமல் அப்படியே மூடி வைத்து விடுங்கள். மாவு அரைத்து பிறகு சுமார் 3 மணி நேரம் மட்டும் வெளியே வைத்தால் போதும். பிறகு ஃப்ரிட்ஜில் வைத்து விடுங்கள்.
- தேவைப்படும் போது மட்டுமே மாவை எடுத்து பயன்படுத்துங்கள். ஆனால் கைகளை பயன்படுத்தாமல் கரண்டியை பயன்படுத்துங்கள். பிறகு எடுத்த மாவில் உப்பு சேர்த்துக் கொள்ளுங்கள். அதுபோல மாவில் கைப்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். இல்லையெனில், சீக்கிரமாகவே புளித்துவிடும்.
- ஃப்ரிட்ஜ் இல்லை என்றால் ஒரு பெரிய பாத்திரத்தில் அரைத்த மாவில் பாத்திரத்தை வைக்கவும். இதனால் மாவு சீக்கிரமாகவே பிடிக்காது. மற்றொரு வழி என்னவென்றால், மாவு அறுத்த பிறகு ஒரு வாழை இலை கொண்டு மூடி வைக்க வேண்டும். இப்படி செய்தால் இரண்டு நாட்கள் மாவு புளிக்காமல் பிரெஷ்ஷாக இருக்கும்.