தேவையான பொருட்கள்:
சாதம் – 1 கப்
ரவை – 1 கப்
புளித்த தயிர் – 2 டீஸ்புன்
சமையல் சோடா – 1 டீஸ்புன்
உப்பு – தேவையான அளவு
3. ரவை நன்றாக ஊறிய பிறகு அதில் அரைத்து வைத்த சாதத்தை சேர்த்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு இரண்டு டேபிள்ஸ்பூன் நன்றாக புளித்த தயிரை அதில் சேர்த்து விடுங்கள். இதையும் பத்து நிமிடம் நன்றாக ஊற வைத்து விடுங்கள்.
4. பத்து நிமிடம் கழித்து சமையல் சோடா மாவையும், உப்பையும் சேர்த்து மாவை அடித்து கலந்து வைத்து விடுங்கள். தேவைப்பட்டால் பொடியாக உடைத்த முந்திரிப் பருப்பு, கருவேப்பிலை, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய இஞ்சி போன்ற பொருட்களை சேர்த்து கொள்ளலாம்.
5. இந்த மாவு ஒரு மணி நேரமாவது தயிரில் ஊறினால் தான் மாவு நன்றாக புளித்து வரும். நீங்கள் உடனடியாகவே ஊற்ற வேண்டும் என்றால் சமையல் சோடா மாவிற்கு பதிலாக ஈனோ உபயோகப்படுத்தலாம். (ஆனால் ஈனோ அடிக்கடி எடுத்து கொள்வது உடலுக்கு நல்லது இல்லை) பிறகு ஒரு மணி நேரம் கழித்து இந்த மாவை எடுத்து நீங்கள் வழக்கம் போல் இட்லி சுடலாம். இதன் சுவை வேற லெவலில் இருக்கும். நிச்சயம் ட்ரை பண்ணி பாருங்கள்.