செய்முறை விளக்கம்:
முதலில் பிரண்டையை கழுவி சுத்தம் செய்து, அதில் நான்கு புறமும் மெலிதாக இருக்கும் நாரை எடுத்து கொள்ளுங்கள்.
பிறகு அடுப்பில் ஒரு கடாயை வைத்து சிறிது நல்லெண்ணெய் ஊற்றி, இந்த பிரண்டையை அதில் சேர்த்து நன்றாக பச்சை நிறம் போகும் வரும் வரை வதக்கி எடுத்துக் கொள்ளுங்கள்.
பிறகு அதே கடாயில் சிறிது எண்ணெயை ஊற்றி உளுத்தம் பருப்பை போட்டு சற்று பொன்னிறமாக வறுத்து கொள்ளுங்கள். அதனுடன் காய்ந்த மிளகாய், பூண்டு, ஒரு துண்டு இஞ்சி போட்டு வதக்கி கொள்ளுங்கள். அதில், துருவிய தேங்காய், புளி சேர்த்து மொத்தமாக வறுத்து எடுத்து வைத்து விடுங்கள்.