செய்முறை விளக்கம்:
1. முதலில் கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி, கடுகு காய்ந்த மிளகாய் போட்டு வதக்கவும். அதனுடன் வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்கவும்.
2. பின்னர் வெங்காயம் நன்கு வதங்கியதும் அதனுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். அது வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
3. பின்னர், அனைத்தும் நன்றாக வதங்கியதும் அதனுடன் மிளகாய்த்தூள், தனியாத்தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும். அதனுடன் சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.