பெண்கள் தங்களுடைய அழகிற்கு அழகு சேர்க்க, கைகளில் மருதாணி வைத்து கொள்வது உண்டு. வீட்டில் சுப நிகழ்ச்சிகள், பொங்கல் போன்ற அனைத்து விதமான பண்டிகை நாள்கள் ஆரம்பித்தாலே ஒவ்வொரு வீட்டில் உள்ள பெண்களும் கைகளில் மருதாணி போடுவதற்கு ஆர்வமாக இருப்பார்கள். கைகளில் மருதாணி வைக்க வேண்டும் என்றால், இதற்காக முன்பெல்லாம் மருதாணி இலையைப் பறித்து அரைத்து வைக்க வேண்டும். அப்படி இல்லையென்றால், இன்றைய பிஸியான நேரத்தில், ரெடிமேட் மெஹந்தி கடைகளில் கிடைக்கிறது அதை வாங்கி வைத்துக் கொள்கிறோம்.