கெமிக்கல் ஷாம்புகளால் முடி கொட்டுதா? இனி கவலை வேண்டாம்! மாதந்தோறும் பணத்தை வீணாக்காமல், இயற்கையான முறையில் வீட்டிலேயே எளிதாக ஷாம்பூ தயாரிக்கலாம். பக்கவிளைவுகள் இல்லாத இந்த இயற்கை ஷாம்பூ உங்கள் கூந்தலை ஆரோக்கியமாக மாற்றும்; உங்களுக்கான சிறந்த தீர்வு
கடைகளில் வாங்கும் ஷாம்பூக்களில் இருக்கும் 'சல்பேட்' மற்றும் 'பாரபென்' தான் உங்கள் முடியை வறட்சியாக்கி, வேர்களை பலவீனப்படுத்துகிறது. கவலைப்படாதீங்க, நம்ம பாட்டி காலத்து ரகசியத்தை கொஞ்சம் ட்ரெண்டியா மாத்தி இப்போ நாமே ஷாம்பு செய்யலாம்.
25
கிச்சனில் இருக்கும் 3 பொருட்கள் போதும்!
நமக்குத் தேவை மூன்றே விஷயங்கள் தான். பூந்திக்கொட்டை (Soapnuts)- இதுதான் இயற்கை நுரை தரும் கிங்!. சீயக்காய் (Shikakai)- முடியை சுத்தமாக்கும் கண்டிஷனர். உலர்ந்த நெல்லிக்காய் (Amla)- முடிக்கு கருகருன்னு ஊட்டச்சத்து தரும் டானிக்.
35
தயாரிக்கும் முறை (ரொம்ப சிம்பிள்!)
பூந்திக்கொட்டை, சீயக்காய், நெல்லிக்காய் மூன்றையும் சம அளவில் எடுத்து இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வையுங்கள். காலையில் அந்தத் தண்ணீரை அடுப்பில் வைத்து, பாதியாக சுண்டும் வரை நன்றாகக் கொதிக்க விடுங்கள். சூடு ஆறினதும் கைகளால் நன்றாகப் பிசைந்தால் திக்கான, நுரை ததும்பும் ஷாம்பு தயார்! அதை வடிகட்டி பாட்டிலில் ஊற்றி வைங்க.
சிலருக்கு இந்த இயற்கை ஷாம்பூவின் மூலிகை வாசனை பிடிக்காமல் போகலாம். அதற்கு ஒரு சூப்பர் தீர்வு இருக்கு. நீங்கள் தயாரித்த ஷாம்பூவில் 2 அல்லது 3 துளிகள் லாவண்டர் அல்லது ரோஸ்மேரி 'எசென்ஷியல் ஆயில்' (Essential Oil) சேர்த்துக் கொள்ளுங்கள். அப்புறம் பாருங்க, உங்க கூந்தல் பார்லர் போனது போல கமகமன்னு மணக்கும்!
55
இதை எப்படிப் பயன்படுத்துவது?
இந்த ஷாம்பு வழக்கமான ஷாம்பு போல அலை அலையாக நுரை தராது. ஆனால், தலையில் இருக்கும் அழுக்கு மற்றும் அதிகப்படியான எண்ணெயை வேரோடு அகற்றிவிடும். வாரத்திற்கு இரண்டு முறை தேய்த்துக் குளித்தால், ஒரு மாதத்தில் புதிய முடிகள் வளர்வதை நீங்களே பார்க்கலாம்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.