வெங்காயம் அல்லது உருளைக்கிழங்கு பயன்படுத்தவும்:
கல்லை சுத்தம் செய்த பின்னர், கால் பகுதி உருளைக்கிழங்கு அல்லது வெங்காயத்தை நறுக்கி எண்ணெயில் முக்கி தோசை கல்லில் நன்கு தேய்க்க வேண்டும். அதிகளவு எண்ணெய் விட்டு தேய்க்க வேண்டாம். ஏனெனில்
தோசை மாவு கல்லில் ஒட்டாது. ஆகையால் ஒரு சொட்டு எண்ணெய் விட்டு கல் முழுவதும் தேய்க்கவும். பின் மாவு ஊற்றி தோசை சுட்டு சாப்பிடுங்கள். இவ்வாறு செய்தால் தோசை அழகாக ஒட்டாமல் வரும்.