பொதுவாக மழை காலத்தில் காய்கறிகளில் பூச்சிகள் மற்றும் பாக்டீரியாக்கள் அதிகமாகவே இருக்கும். எனவே அவற்றை நீங்கள் சேமிப்பதற்கு முன் முதலில் உப்பு மஞ்சள் கலந்த நீரில் நன்றாக கழுவி, உலர்ந்த பிறகு ஃப்ரிட்ஜில் வைத்து சேமிக்க வேண்டும்.
பிளாஸ்டிக் பைகளில் சேமிப்பது :
பச்சை மிளகாய், கேப்சிகம், முள்ளங்கி, கேரட் போன்ற காய்கறிகளை பிளாஸ்டிக் கவரில் சேமித்து வைத்தால் அவற்றின் உள்ளே ஈரப்பதம் செல்லாமல் இருக்க, கவரில் சில துறைகளை உருவாக்குங்கள். இதனால் காய்கறிகள் சீக்கிரமாக கெட்டுப்போவது தடுக்கப்படும். நீண்ட நாள் பிரஷாகவும் இருக்கும்.