கடந்த 2021 ஆம் ஆண்டில், 2 ஆயிரம் ரூபாய் கள்ளநோட்டுக்கள் 54 சதவீதம் அதிகரித்துள்ளதாக ரிசர்வ் வங்கி அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. இதில் 500 ரூபாய் நோட்டுகள் 102 சதவீதமும், 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் 54 சதவீதமும், 10 ரூபாய் நோட்டுகள் 16.4 சதவீதமும், 200 ரூபாய் கள்ள நோட்டுகள் 11.7 சதவீதமும் அதிகரித்துள்ளது என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
Fake Currency
ரூபாய் நோட்டின் முன் பக்கம்:
தேவநாகரி எழுத்தில் 500 எழுதப் பட்டிருப்பதையும் பார்க்கலாம்.
வலது புறம் மையத்தில் மகாத்மா காந்தியின் புகைப்படம் இடம் பெற்றிருக்கும்.
நோட்டை லேசாக வளைத்தால், பாதுகாப்பு நூலின் நிறம் பச்சை நிறத்தில் இருந்து நீலமாக மாறுவதைக் காணலாம்.
ஆளுநரின் கையொப்பம், உத்தரவாதப் பிரிவு, வாக்குறுதி விதி மற்றும் RBI லோகோ ஆகியவை இப்போது வலது பக்கமாக மாற்றப்பட்டுள்ளன.
மகாத்மா காந்தியின் புகைப்படம் மற்றும் எலக்ட்ரோ டைப் வாட்டர் மார்க் ஆகியவையும் தெரியும்.
மேல் இடது பக்கம் மற்றும் கீழ் வலது பக்கம் உள்ள எண்கள் இடமிருந்து வலமாக அதிகரிக்கும்.