குழந்தைகளின் உலகம் ரொம்ப அழகானது. அவர்களின் கற்பனைத்திறன் அளாதியானது. ஆனால் சில நேரங்களில் குழந்தைகளின் சுயப்பேச்சு எதிர்மறையாகவும் (negative) இருக்கும். "நான் முட்டாள், நான் அசிங்கமா இருக்கேன், நான் குண்டா இருக்கேன், நான் ஒல்லியா இருக்கேன். நான் அழகா இல்லை. என்னை யாருக்கும் புடிக்கல" இப்படி குழந்தைகள் கூறினால் உடனடியாக பெற்றோர் தலையிட்டு அவர்களிடம் பேசவேண்டும். அவர்கள் அதிகமாக நேசிக்கப்படுகிறார்கள், அவர்கள் தன்னியல்பாக இருக்கிறார்கள் என்பதை புரிய வைக்க வேண்டும்.