வெளுத்து வாங்கும் வெயில்.. வியர்வையால் தலையில் துர்நாற்றம்... என்ன செய்ய?

First Published May 31, 2023, 7:42 PM IST

இந்தக் கோடையில் நாம் தலைக்கு அடிக்கடி குளிப்பது நல்லது. ஏனெனில் அழுக்கு மற்றும் தூசி சேர்ந்து தலையில் நாற்றத்தை ஏற்படுத்தும். இதனை போக்க இப்பதிவில் உள்ள சில குறிப்புகள் உங்களுக்கு உதவும்.

கோடை காலத்தில் வியர்வை வருவது சகஜம். இதனுடன் நம் தலையும் வியர்ப்பதால் முடியில் நாற்றம் ஏற்பட தொடங்குகிறது. இதனால் நமக்கு பல நேரங்களில் சங்கடம் ஏற்படுகிறது. இந்த பிரச்சனையில் இருந்து விடுபட என்ன செய்ய வேண்டும் என்று தெரியவில்லையா? இந்த கட்டுரையில் உள்ள குறிப்புகள் உங்கள் முடியிலிருந்து வரும் நாற்றத்தை எவ்வாறு அகற்றுவது என்று கூறப்பட்டுள்ளது.

எலுமிச்சை பயன்படுத்தவும்:

எலுமிச்சையை முடிக்கு பயன்படுத்தலாம் என்று தெரியுமா?ஆனால் எலுமிச்சை சாற்றை நீர்த்துப்போகாமல் பயன்படுத்தக்கூடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். தேவையான அளவு தண்ணீரில் ஒரு எலுமிச்சை பழத்தில் உள்ள சாற்றை கலக்கவும். பின் நீங்கள் உங்கள் முடியை ஷாம்புவினால் அலசியப்பின் இந்த கலவையை உங்கள் தலையில் பயன்படுத்தவும். எலுமிச்சம் பழச்சாற்றை முடிக்கு தடவினால் துர்நாற்றம் நீங்குவது மட்டுமின்றி பொடுகு பிரச்சனையும் குறையும்.
 

தேயிலை மர எண்ணெய்:
ஒரு பாத்திரத்தில் 6 துளிகள் தேயிலை மர எண்ணெய் மற்றும் 2 டீஸ்பூன் பாதாம் எண்ணெய் சேர்க்கவும். இப்போது இரண்டு பொருட்களையும் கலக்கவும். வியர்வையால் கூந்தலில் இருந்து வரும் துர்நாற்றத்தைப் போக்க இந்த எண்ணெயைப் பயன்படுத்தலாம். 

இதையும் படிங்க: How to maintain dosa: தோசை கல்லில் மாவு ஒட்டிக் கொள்கிறதா? இந்த சிம்பிள் டிப்ஸ பாலோ பண்ணுங்க.!!

உபயோகிப்பது?
இந்த எண்ணெயை உச்சந்தலையிலும் முடியிலும் தடவவும். முடியை சிறிது நேரம் மசாஜ் செய்யவும். குறைந்தபட்சம் அரை மணி நேரம் முடியில் எண்ணெய் விட்டு விடுங்கள். கடைசியாக ஷாம்பூவுடன் முடியைக் கழுவவும்.

தேயிலை மர எண்ணெயை முடிக்கு தடவுவதால் கிடைக்கும் நன்மைகள்:

உங்களுக்கு தலையில் பேன் இருந்தால், தேயிலை மர எண்ணெயைப் பயன்படுத்துவது இந்த சிக்கலைக் குறைக்கும்.

தேயிலை மர எண்ணெய் உச்சந்தலையை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.

நீங்கள் தேயிலை மர எண்ணெய் பொடுகு பிரச்சனையை குறைக்கும் .
 

கண்டிப்பாக இதை மறக்காதீங்க:

உங்கள் தலைமுடியில் வாசனை இல்லை என்று நீங்கள் விரும்பினால், வாரத்திற்கு 2-3 முறையாவது உங்கள் தலைமுடியைக் கழுவ வேண்டும். தலையில் எண்ணெய் பசை இருப்பதால் கூந்தலும் துர்நாற்றம் வீசுகிறது. அதனால் உச்சந்தலையை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். உச்சந்தலையை ஆரோக்கியமாக வைத்திருக்க மசாஜ் செய்யவும். முடியை சுத்தமாக வைத்திருங்கள். அதாவது, அழுக்கு முடி காரணமாக, துர்நாற்றம் பிரச்சனை ஏற்படலாம். ஹேர் ஸ்பா செய்து கொள்ளுங்கள். இது முடியை ஆழமாக நிலைநிறுத்த உதவுகிறது.

click me!