Natural Kosu Viratti: வீட்டில் இருக்கும் கெட்ட சக்திகளை விரட்டி அடிக்கும் இந்த ஒரு மூலிகை இலை பயன்படுத்தினால் போதும், வீட்டில் மூலை முடுக்குகளில் மறைந்துள்ள கொசுவை இயற்கை முறையில் தேடி தேடி கொல்லும்.
மழைக்காலம் வந்து விட்டாலே கூடவே, சளி, இருமல், காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு ஆரோக்கியம் சார்ந்த பிரச்சனைகள் வந்து நமக்கு தொல்லை கொடுக்கும். கூடவே கொசு தொல்லை ஆரம்பிக்கும். இதனால் நமக்கு உடலில் நமக்கு பல்வேறு நோய் தொற்றுகள் தோற்றும். பகலில் வேலை எல்லாம் முடித்துவிட்டு இரவில் உறங்க சென்ட்ரல் நிம்மதியான தூக்கம் இருக்காது..இதனால், மறுநாள் பார்க்க வேண்டிய வேலைகள் மன அழுத்தம், தூக்கமின்மை காரணமாக தடை படும்.
இதற்கு நாம் என்னதான் வீட்டில் மஸ்கிட்டோ கில்லர்கள் லிக்விட் வகையில் வாங்கி பயன்படுத்தினாலும், கொசு தொல்லை ஒழிந்த பாடு இருக்காது, மாறாக சுவாச பிரச்சனை உள்ளிட்ட நம்முடைய உடல் ஆரோக்கியம் தான் பாதிக்கப்படும். எனவே, நீங்கள் இத்தகைய செயற்கையான கொசு விரட்டிகளை பயன்படுத்துவதை விட இயற்கையான முறையில் கிடைக்கும், நம்முடைய முன்னோர்கள் பயன்படுத்திய மூலிகை இலை ஒன்றை பயன்படுத்தினால் போதும்..இது வீட்டில் மூலை முடுக்குகளில் மறைந்துள்ள கொசுவை தேடி தேடி கொல்லும்.
அதற்கு முதலில் நீங்கள், ஒரு தேவை இல்லாத எவர்சில்வர் அல்லது பீங்கான் பாத்திரம் ஏதாவது இருந்தால் எடுத்துக் கொள்ளுங்கள். அதில், கம்ப்யூட்டர் சாம்பிராணி ஒன்றை பாதியாக உடைத்து பற்ற வைத்துக் கொள்ளுங்கள். சாம்பிராணியில் இருந்து புகை வரும் பொழுது அதில் ஃப்ரெஷ் ஆன 10 வேப்பிலைகளை போட்டுக் கொள்ளுங்கள்.
44
Natural Kosu Viratti:
இந்த சாம்பிராணி புகையுடன் வேப்பிலை வாசம் மூலை முடுக்குகளில் மறைந்துள்ள கொசுவை ஓட ஓட கொல்லும்..இது வீடு முழுவதும் பரவும் பொழுது ஒரு கொசு கூட வீட்டில் தங்கவே தங்காது. எனவே, இயற்கையான முறையில் எந்த விதமான ரசாயன கலவைகளும் இல்லாமல், நம்முடைய ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்காமல் கொசுவை விரட்டக்கூடிய இந்த இயற்கை கொசு விரட்டியை நீங்களும் உங்கள் வீட்டில் ட்ரை பண்ணி பாருங்க ..இன்றிலிருந்தே துவங்குங்கள் நிச்சம் ஆச்சரியப்படுவீர்கள்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.