புளி கரைகலுக்காக, முன்னதாக ஒரு சிறிய கிண்ணத்தில் தண்ணீர் உற்றி புளியை நன்கு ஊரவைக்க வேண்டும்.
கடாயில் நல்லெண்ணெய் விட்டு, அதனுடன் கடலை எண்ணையையும் சேர்த்து நன்றாக சூடாக்க வேண்டும். அதன்பிறகு அதில் வெந்தயம் மற்றும் கடுகை போட்டு நன்றாக தாளிக்க வேண்டும். வெந்தயம் கருகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
அவசர காலை உணவுக்கு ஏற்றது ''தயிர் சாண்ட்விச்''! - ஸ்பீடா செஞ்சு சாப்பிட்டு போயிட்டே இருக்கலாம்!!
பின்னர், அதனுடன் சிறிய வெங்காயத்தை சேர்க்கவேண்டும். வெங்காயத்தினை பொடியாக அறியாமல் பாதியாக வெட்டி போடவேண்டும். அதனுடன் பூண்டு மற்றும் தக்காளி ஆகியவற்றை அறிந்து போடவேண்டும். பின், அதனுடன் மிளகாய்த்தூள், தனியாதூள் மற்றும் சீரகப்பொடி ஆகியவற்றை போட்டு நன்றாக கலக்க வேண்டும்.
பிறகு அதனுடன் தேவையான அளவு குழம்பு மிளகாய்த்தூள் சேர்த்து ஊறவைத்த புளிக்கரைசல் வடிகட்டி ஊற்றி நன்றாக கொதிக்கவிட வேண்டும். குழம்பு நன்கு கொதித்த வந்ததும் சிறிதளவு கறிவேப்பிலை போட்டு தேவையான அளவு உப்பு கலக்க வேண்டும். அவ்வளவுதான் சுவையான வெந்தய குழம்பு ரெடி!
நெய்யுடன் இந்த உணவுகளை சேர்த்து சாப்பிட்டால் மாரடைப்பு குட்பை..!! புற்றுநோய்க்கு பை பை..!!