தோசை மாவு புளித்ததும், தாளிப்பு தயார் செய்ய வேண்டும்.
மாவை தாளிக்க ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து சூடானதும், அதில் கடுகு, உளுத்தம் பருப்பு, நறுக்கிய பச்சை மிளகாய் பொடி மற்றும் கருவேப்பிலை அனைத்தையும் சேர்த்து பொரியவிட வேண்டும்.
இந்த தாளிப்பை, தோசை மாவுடன் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். பிறகு, அடுப்பில் வைத்து ஆப்பக் கடாயை சூடாக்கி அதில் எண்ணெய் அல்லது நெய் தடவி, ஒரு கரண்டி தோசை மாவை பரப்பாமல் அப்படியே ஊற்ற வேண்டும். ஒரு மூடி வைத்து மிதமான சூட்டில் சுமார் 3 நிமிடங்கள் வேக விடவும். பிறகு திருப்பி போட்டு மறுபுறமும் வேக வைக்கவும்.
நன்றாக தோசை வெந்ததும் வேறு தட்டிற்கு மாற்றி எடுத்தால் பஞ்சு போன்ற மிருதுவான, சுவையான பன் தோசை ரெடி. இதனுடன், தேங்காய் சட்னி அல்லது சாம்பருடன் சேர்த்து சாப்பிட மிகவும் ருசியாக இருக்கும்.