பாட்டில்களைக் கழுவுவதுடன் மட்டும் நிறுத்திவிடாமல், அவற்றைக் காய வைக்கும் முறையிலும் கவனம் செலுத்த வேண்டும். கழுவி முடித்தவுடன் பாட்டில்களைக் குப்புறக் கவிழ்த்து வைக்காமல், நேராகவோ அல்லது சாய்வாகவோ வைத்து முழுமையாக உலர விட வேண்டும். ஈரப்பதம் பாட்டிலுக்குள் தங்காமல் இருந்தாலே பாக்டீரியாக்கள் உருவாவதைத் தடுக்கலாம்.
அதேபோல், பாட்டிலின் மூடி மற்றும் அதில் இருக்கும் ரப்பர் வளையங்களை (Silicon Rings) தனியாகக் கழற்றிச் சுத்தம் செய்வது மிக அவசியம். ஏனெனில், இந்த இடுக்குகளில்தான் அதிகப்படியான அழுக்கும் பாசியும் சேரும். வாரத்திற்கு ஒருமுறையாவது பாட்டில்களை ஆப்பிள் சைடர் வினிகர் அல்லது சாதாரண வெள்ளை வினிகர் கலந்த நீரில் ஊற வைத்து அலசுவது, கண்ணுக்குத் தெரியாத கிருமிகளை முற்றிலும் அழிக்க உதவும்.
உடல் ஆரோக்கியத்தைக் காக்க, தினசரி பயன்பாட்டில் இருக்கும் வாட்டர் பாட்டில்களை வார இறுதி வரை காத்திருக்காமல், தினமும் ஒருமுறை சோப் மற்றும் வெந்நீர் கொண்டு சுத்தம் செய்வதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.