தாய்ப்பால் குழந்தைகளின் ஆரோக்கியத்தை உறுதி செய்வதற்கான மிகச் சிறந்த வழிகளில் ஒன்றாகும். பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் அமிர்தம் போன்றது என்றால் அது மிகையல்ல. தாய்ப்பால் மூலம் குழந்தைகளுக்கு இயற்கையான முறையில் ஊட்டச்சத்து, நீர்ச்சத்து போன்றவை கிடைப்பதுடன் முக்கியமாக நோய் எதிர்ப்புச் சக்தியையும் கொடுக்கிறது.
மசித்த வாழைப்பழம் :
பாதி வாழைப்பழத்தை எடுத்து கொண்டு தோல் நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். அதனுடன் சிறிது அளவு தண்ணீர் ஊற்றி சேர்த்து மசித்து கொள்ளவும். ப்யூரி போன்ற பதம் வரும்வரை கலக்கவும். இந்த மசித்த வாழைப்பழ ப்யூரியை குழந்தைக்கு தந்து வரலாம்.
மேலும் படிக்க...Garlic: அதிக அளவிலான பூண்டு உடல் நலத்திற்கு ஆபத்தா? வெளியான அதிர்ச்சி தகவல்...மிஸ் பண்ணாம தெரிந்து கொள்ளுங்கள்
செரலாக்:
செரலாக் தினமும் ஒரு வேளை கொடுக்கலாம். படிப்படியாக இரண்டு வேளையும் சேர்க்கலாம். இதையே குழந்தைக்கான திட உணவு கொடுக்கும் போது வேக வைத்தும் கொடுக்கலாம். புரதம் நிறைந்த இந்த ஹோம்மேட் செர்லாக் குழந்தையின் வளர்ச்சிக்கு தேவையான அனைத்து சத்துகளையும் கொண்டிருக்கிறது என்பதை குழந்தையின் ஆரோக்கியமான வளர்ச்சியில் அறிய முடியும்.
கேரட்:
நீங்கள் காய்கறிகளை கொடுக்க ஆரம்பிக்கலாம். அதில் கேரட் குழந்தைக்கு ஏற்ற உணவு. கேரட்டை வேக வைத்து மசித்தோ அல்லது ஜூஸாகவோ ஒரு டேபிள் ஸ்பூன் என ஒருவேளை தரலாம். ஒரு நாளைக்கு வேகவைத்து மசித்த கேரட் அல்லது ஜூஸை 2 டேபிள் ஸ்பூன் வீதம் 2 முறை தரவும்.