Published : Nov 01, 2024, 04:33 PM ISTUpdated : Nov 01, 2024, 04:46 PM IST
Smelly Hair Remedies : மழைக்காலத்தில் உங்கள் தலைமுடியில் இருந்து துர்நாற்றம் வீசுகிறதா? கவலை வேண்டாம். இங்கு கொடுக்கப்பட்டுள்ள சில வீட்டு வைத்தியங்களை மட்டும் ட்ரை பண்ணி பாருங்கள். உங்கள் தலைமுடி மணக்கும்.
மழைக்காலத்தில் ஈரப்பதம் அதிகமாக இருப்பதால் சரும மற்றும் தலைமுடியில் நிறைய மாற்றங்கள் ஏற்படும். அதுவும் குறிப்பாக உச்சந்தலையில் வியர்வை அதிகரிக்கும். கூந்தலில் வியர்வை அதிகரிப்பால் முடி பிசுபிசுப்பாகவும், எண்ணெய் பசையாகவும் இருக்கும்.
24
Smelly Hair Remedies In Tamil
அதுவும் குறிப்பாக தலைமுடியில் இருந்து துர்நாற்றம் வீச ஆரம்பிக்கும். இதனால் சங்கடமாக உணர்வோம். ஆனால் சில வீட்டு வைத்தியங்களை பின்பற்றினால் இந்த பிரச்சனையை சுலபமாக கட்டுப்படுத்தி விடலாம். எனவே மழை காலத்தில் முடியில் இருந்து வரும் துர்நாற்றத்தை போக்க என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
மழைக்காலத்தில் தலைமுடியில் இருந்து துர்நாற்றம் வீசுவதை தடுக்க டிப்ஸ்:
வெந்தயம் மற்றும் கற்றாழை ஜெல்
தலைமுடியில் இருந்து வரும் துர்நாற்றத்தை போக்க, வெந்தயம் மற்றும் கற்றாழை ஜெல் பெரிதும் உதவும். கற்றாழை ஜெல் உச்சந்தலையை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது. வெந்தயம் தலைமுடியை சுத்தம் செய்யும் மற்றும் நோய் தொற்றை குறைக்கவும் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே இவற்றைக் கொண்டு பேஸ்ட் தயாரிக்க 3 ஸ்பூன் வெந்தயம் மற்றும் சிறிதளவு கற்றாழை ஜெல்லை மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்து, அந்த பேஸ்ட்டை தலையில் தடவி சுமார் 10 நிமிடம் கழித்து குளிக்க வேண்டும்.
துளசி நீர்
மழைக்காலத்தில் கூந்தலில் இருந்து வரும் துர்நாற்றத்தை நீக்க துளசி நீரை பயன்படுத்தவும். துளசி நீரில் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இது தொற்று நோயை நீக்குகிறது. இதற்கு கொதிக்கும் நீரில் துளசி இலையை போட்டு, பிறகு மிதமான சூட்டில் இருக்கும்போது உங்கள் தலைமுடியை கழுவவும். இதனால் தலைமுடியில் இருந்து துர்நாற்றம் நீங்கும்.
44
Smelly Hair Remedies In Tamil
எலுமிச்சை சாறு
எலுமிச்சை சாறு தலைமுடியில் இருந்து வரும் துர்நாற்றத்தை நீக்க பெரிதும் உதவுகிறது இதற்கு நீங்கள் தலைக்கு பயன்படுத்தும் தண்ணீரில் எலுமிச்சை சாறு கலந்து குளிக்கவும். இப்படி செய்வதன் மூலம் தலைமுடியில் துர்நாற்றம் அடிக்காது. நீங்கள் ஷாம்பு போட்ட பிறகுதான் எலுமிச்சை நீரை தலைக்கு பயன்படுத்த வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
புதினா மற்றும் தயிர்
புதினாவில் டாக்டர் எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளனர். எனவே தயிருடன் புதினா விழுதை சேர்த்து அதை தலைமுடியில் தடவினால், கூந்தலில் இருந்து துர்நாற்றம் அடிக்காது மற்றும் முடி உதிர்தலும் குறையும். நீங்கள் இந்த பேஸ்ட்டை கூந்தலில் தடவிய பிறகு 15 நிமிடம் கழித்து தலைக்கு குளிக்க வேண்டும். இதை நீங்கள் வாரத்திற்கு இரண்டு முறை பயன்படுத்தலாம்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.