Thuthuvalai benefits: நீரழிவு பிரச்சனைக்கு தீர்வு தரும் தூதுவளை...! தினமும் எப்படி சாப்பிட வேண்டும் தெரியுமா?

Published : Sep 19, 2022, 10:16 AM IST

Thuthuvalai benefits: நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் தூதுவளை இலையினை தினமும் எப்படி சாப்பிட வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து வைத்து கொள்வோம்.

PREV
16
Thuthuvalai benefits: நீரழிவு பிரச்சனைக்கு தீர்வு தரும் தூதுவளை...! தினமும் எப்படி சாப்பிட வேண்டும் தெரியுமா?

தூதுவளையின் இலை, பூ, காய், வேர் அனைத்தும் மருத்துவப் பயன்கள் கொண்டவை ஆகும். தூதுவளை நமது உடல் வலிமையையும் மனதின் திறனையும் மேம்படுத்தக்கூடியது அது மட்டுமல்ல, நீரிழிவுக்கு மாமருந்தாக செயல்படுகிறது. தூதுவளையை தினசரி சில இலைகளை மென்று தின்றால் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு குறையும்.

 மேலும் படிக்க...உங்கள் படுக்கை அறையில் இந்த பொருட்கள் இருந்தால், உங்கள் குடும்பத்தில் தீராத பணக்கஷ்டம் வந்து சேருமாம்..

26

தூதுவளையில் கால்சியம் சத்து அதிகம் நிறைந்துள்ளதால் எலும்பையும், பற்களையும் பலப்படுத்தும். தூதுவளையின் சாற்றில் உள்ள எத்தனாலிக் என்ற பண்பு, ரத்தத்தில் உள்ள குளுக்கோஸின் அளவை நிர்வகிக்க உதவுகிறது. தூதுவளை இலையை தொடர்ந்து உணவில் சேர்த்து வந்தால், உடல் பலம் பெறும், ஆரோக்கியம் மேம்படும்.

36

தூதுவளை இலையுடன் மிளகு, சின்னவெங்காயம், பூண்டு சேர்த்து நன்கு வதக்கி துவையலாக செய்து சாப்பிடலாம். குறிப்பாக, காது மந்தம், இருமல், நமைச்சல் பெருவயிறு மந்தம் போன்றவற்றிற்கு தூதுவளைக் கீரை சிறந்த மருந்தாகும்.

 தூதுவளையை நிழலில் உலர்த்தி பொடியாக்கி வைத்துக் கொண்டு காலை, மாலை என இருவேளையும் தேனில் கலந்து பத்தியம் இருந்து ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தால் இருமல், இளைப்பு நீங்கி உடல் வலுவடையும். 

46

தூதுவளைப் பூவை நிழலில் உலர்த்தி பொடியாக்கி பாலில் கலந்து அருந்தி வந்தால் உடலுக்கு வலு கொடுக்கும். தூதுவளையின் இலை, பூ இரண்டையும் போலவே, இதன் பழத்தை காயவைத்து பயன்படுத்தலாம்.

 மேலும் படிக்க...உங்கள் படுக்கை அறையில் இந்த பொருட்கள் இருந்தால், உங்கள் குடும்பத்தில் தீராத பணக்கஷ்டம் வந்து சேருமாம்..

 

 

56

புற்றுநோயை குணப்படுத்தும் பண்புகள் அனைத்தும் தூதுவளையில் உள்ளது. புற்றுநோய் செல்கள் ஏற்படாமல் காக்கும் ஆற்றல் தூதுவளைக்கு உண்டு. எந்தவித கட்டிகளும் ஏற்படாமல் காக்கும் தன்மை கொண்டது என சித்த மருத்துவம் சொல்கிறது.  

 

 

66

மழைக்காலத்தில், ஜலதோஷம், மூக்கு ஒழுகுதல் மற்றும் உடல் வலிகள் போன்றவை நம்மை பாடாய் படுத்தும். வாரத்தில் ஒருமுறையேனும் இந்த  தூதுவளை துவையல் செய்து சாப்பிட்டு வந்தால் சளி , இருமல் இருக்கவே இருக்காதாம் .அதேபோல, உடலில் நச்சுத்தன்மையை நீக்கும் தன்மையும் தூதுவளை பழத்தின் பொடிக்கு உண்டு.  

 மேலும் படிக்க...உங்கள் படுக்கை அறையில் இந்த பொருட்கள் இருந்தால், உங்கள் குடும்பத்தில் தீராத பணக்கஷ்டம் வந்து சேருமாம்..

Read more Photos on
click me!

Recommended Stories