தூதுவளையில் கால்சியம் சத்து அதிகம் நிறைந்துள்ளதால் எலும்பையும், பற்களையும் பலப்படுத்தும். தூதுவளையின் சாற்றில் உள்ள எத்தனாலிக் என்ற பண்பு, ரத்தத்தில் உள்ள குளுக்கோஸின் அளவை நிர்வகிக்க உதவுகிறது. தூதுவளை இலையை தொடர்ந்து உணவில் சேர்த்து வந்தால், உடல் பலம் பெறும், ஆரோக்கியம் மேம்படும்.
தூதுவளை இலையுடன் மிளகு, சின்னவெங்காயம், பூண்டு சேர்த்து நன்கு வதக்கி துவையலாக செய்து சாப்பிடலாம். குறிப்பாக, காது மந்தம், இருமல், நமைச்சல் பெருவயிறு மந்தம் போன்றவற்றிற்கு தூதுவளைக் கீரை சிறந்த மருந்தாகும்.
தூதுவளையை நிழலில் உலர்த்தி பொடியாக்கி வைத்துக் கொண்டு காலை, மாலை என இருவேளையும் தேனில் கலந்து பத்தியம் இருந்து ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தால் இருமல், இளைப்பு நீங்கி உடல் வலுவடையும்.
புற்றுநோயை குணப்படுத்தும் பண்புகள் அனைத்தும் தூதுவளையில் உள்ளது. புற்றுநோய் செல்கள் ஏற்படாமல் காக்கும் ஆற்றல் தூதுவளைக்கு உண்டு. எந்தவித கட்டிகளும் ஏற்படாமல் காக்கும் தன்மை கொண்டது என சித்த மருத்துவம் சொல்கிறது.