Dheivea kadatcham peruga in Tamil: உங்கள் குடும்பம் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்றால், வாஸ்துபடி வீட்டில் வடக்கு திசையில் இந்த ஒரு பொருளை வைக்க வேண்டும்.
நம்முடைய வீடு நல்ல நிலையில் இருக்க வேண்டும் என்றால், முதலில் அந்த வீட்டில் நல்ல ஆற்றலானது நிறைந்து இருக்க வேண்டும். அப்படி நல்ல ஆற்றல் இல்லை என்றால், குடும்பத்தில் பிரச்சனை, சோம்பேறித்தனம், பீடை,போன்றவை பாடாய் படுத்தும். இதற்கு கண் திருஷ்டி, துர்தேவதைகளின் வாசம் முக்கிய காரணமாக உள்ளது. இதனால் வீடு முழுக்க எப்போதும் எதிர்மறை ஆற்றலை சூழ்ந்திருக்கும், எதிர் மறை ஆற்றல் சூழ்ந்த வீட்டில் உள்ளவர்களால் தெளிவான எந்த முடிவையும் எடுக்க முடியாது. ஒரு வித தடுமாற்றம் ஏற்படும்.
குடும்பம் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்றால், இதற்காக வாஸ்துபடி வீட்டில் வடக்கு திசையில் பிரம்மாண்டமான விநாயகர் உருவத்தைக் கொண்ட யானை வைக்க வேண்டும். இந்த யானை முகத்தவனை, யானை ரூபத்திலேயே கொண்டு வந்து நம் வீட்டில் வடக்கு திசையில் அமர வைக்க வேண்டும்.
அதுபோல நம்முடைய வீட்டில் கண் திருஷ்டி இருந்தால் வீடு துடைக்கும் தண்ணீரில் கல் உப்பு சேர்த்து துடைக்க வேண்டும். இந்த கல் உப்பு சேர்த்து வீடு துடைக்கும் போது வீட்டில் இருக்கும் கண் திருஷ்டி கழியும், வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றல் , தீய சக்திகள் விலகும்.
45
Vastu tips for home:
அதேபோல பூஜை அறையை சுத்தம் செய்யும் போது, கொஞ்சம் கல் உப்பு, சிறிதளவு மஞ்சள் தூள், கற்பூரம், பசுங்கோமியம் இவை நான்கையும் கலந்து வைத்து துடைத்து விடுங்கள்இப்படி, வீடு துடைத்தால் தான் அனைத்து இடங்களில் உள்ள எதிர்மறை ஆற்றலும் வெளியேறும். சுபீட்சம் பெருகும்.
55
Vastu tips for home:
குறிப்பாக, அந்த யானையை வடக்கு திசையில் வையுங்கள். தும்பிக்கை வடக்கு திசையை பார்த்தவாறு வைக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அப்படி செய்தால், குடும்பத்தில் பிரச்சனை விலகி நிம்மதி பிறக்கும். நீண்ட நாள் தடைபட்ட காரியம் வெற்றி கிடைக்கும். பண தேவை பூர்த்தியடையும். வீட்டில் செல்வம் பெருகும். சண்டை சச்சவுகள் நீங்கி குடும்பத்தில் ரந்தரமான நிம்மதி நிலவும். நம்பிக்கை உள்ளவர்கள் முயற்சி செய்து பாருங்கள்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.