உப்பு நீரில் பாதங்களை ஊற வைத்தால் நடக்கும் அதிசயம்!!

Published : Oct 24, 2024, 01:19 PM IST

நீரில் பாதங்களை ஊற வைப்பதால் மன அழுத்தம் நீங்கி நல்ல தூக்கம் கிடைக்கும். உடலுக்கு நல்ல ஓய்வு கிடைக்கும்.  

PREV
14
உப்பு நீரில் பாதங்களை ஊற வைத்தால் நடக்கும் அதிசயம்!!
உப்பு நீரில் பாதங்களை வைப்பதால் கிடைக்கும் நன்மைகள்

உப்பு நீரில் பாதங்களை வைப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்ன என்று பார்க்கலாம். பாதங்களில் இருக்கும் அழுக்கு மட்டும் நீங்குவதில்லை. பாதங்கள் வழியாக உடலுக்கும் புத்துணர்வு கிடைக்கிறது.

24
நிம்மதியான தூக்கம்

உப்பு நீரில் பாதங்களை ஊற வைப்பதால் நிம்மதியான தூக்கம் கிடைக்கும். குறிப்பாக மெக்னீசியம் நிறைந்த எப்சம் உப்பில் காலை ஊற வைத்தால், உடலுக்குத் தேவையான மெக்னீசியம் கிடைக்கும். தசையில் இருக்கும் வீக்கத்தைக் குறைத்து, வழியைக் குறைக்கும். உப்புத் தண்ணீரில் குளித்தாலும், உடலில் இருக்கும் அசதி நீங்கும். வலி மறையும். நிம்மதியான தூக்கத்தைப் பெறலாம்.

34
கர்ப்பிணிகளுக்கு நன்மை

கர்ப்பிணிப் பெண்களுக்கு உப்பு நீர் அற்புதமான பலன்களைக் கொடுக்கும். சூடான நீரில் எப்சம் உப்பு சேர்த்து குளித்தால், தசை வலி, முதுகு வலி மற்றும் கால் பிடிப்புகளுக்கு உதவும். குளியலில் கிடைக்கும் வெப்பம் தசைகளை தளர்த்த உதவும். கர்ப்ப காலத்தில் பொதுவாக கால் பிடிப்புகளுக்கு சிகிச்சையளிக்க எப்சம் உப்பு குளியல் பரிந்துரைக்கப்படுகிறது.

44
தசை இறுக்கம் மற்றும் மூட்டுகளில் வலி

வெதுவெதுப்பான நீரில் உப்பு சேர்த்து கால்களை ஊற வைத்தால் இறுக்கமான தசைகளை தளர்த்தி வீக்கத்தைக் குறைக்க உதவும். கீல்வாதம் போன்ற நாள்பட்ட வலிகளால் பாதிக்கப்படுபவர்களுக்கு இந்த முறை உதவியாக இருக்கும். காலில் பாக்டீரியாக்கள் இருந்தாலும் விரைவில் சரியாகிவிடும். ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். 

DG
About the Author

Dhanalakshmi G

செய்தித்தாள், டிஜிட்டல் என்று 25 ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிக்கைத்துறையில் அனுபவம் பெற்றவர். தினமலர், தினமணி, டைம்ஸ் இன்டர்நெட் ஆகியவற்றில் பணியாற்றிய அனுபவம் பெற்றவர். கோயம்புத்தூரில் இருக்கும் பிஎஸ்ஜி கலை அறிவியல் கல்லூரியில் எம்.ஏ., இதழியல் பட்டம் பெற்றவர். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட தருணத்தில் மாணவ பத்திரிக்கையாளராக தினமலரில் இருந்து சென்று இருந்தார். இந்த சம்பவம் தொடர்பாக செய்திகளை சமர்ப்பித்தவர். தற்போது ஏஷியா நெட் நியூஸ் தமிழ் டிஜிட்டல் மீடியாவில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். Digital technology புரிந்து கொண்டு பணியாற்றுவதில் ஆர்வம் உள்ளவர். கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் துறையில் பணியாற்றி வருகிறார். சமூக அக்கறை கொண்ட விழிப்புணர்வு சார்ந்த செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர். Explained, Opinion செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories