இஞ்சியில் உள்ள அழற்சி எதிர்ப்பு, ஆக்ஸிஜனேற்ற பண்புகள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் உதவும். இஞ்சி தேநீர் அருந்தினால் மன அழுத்தத்தைக் குறையும் என ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது. இஞ்சியுடன் எலுமிச்சை சேர்த்து எடுத்துக் கொண்டால் பலன்கள் இரட்டிப்பாக்கும். இஞ்சி டீயை வழக்கமாக தயாரிப்பது போல பால், தேயிலை சேர்த்து குடித்தால் புத்துணர்வாக இருக்கும். ஆனால் அதுவே ஆயுர்வேதம் சொல்லும் முறையில் இஞ்சி, எலுமிச்சை தேநீர் குடித்தால் சளி, காய்ச்சல், தொண்டை வலி, செரிமான பிரச்சனை அனைத்தில் இருந்தும் நிவாரணம் கிடைக்கும்.