திராட்சையில் உள்ள வைட்டமின் சி நம் உடலை தாக்கும் பாக்டீரியா, வைரஸ் ஆகிய தொற்றுகளை எதிர்த்து போராட உதவுகிறது. உறுதியான நோய் எதிர்ப்பு மண்டலத்தை உருவாக்குகிறது. இதில் காணப்படும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், புற்றுநோய் அபாயத்தை கணிசமாக குறைக்கும். திராட்சையில் இருக்கும் ரெஸ்வெராட்ரோல் தான் புற்றுநோய் உண்டாக்கும் செல்களுடைய பரவுதலை கட்டுப்படுத்த உதவியாக இருக்கிறது.