கல்லறைத் தோட்டத்திற்குச் செல்வது ஒருபுறம் இருந்தாலும், இதில் சில எச்சரிக்கைகளும் விடுக்கப்படுகின்றன. ஒருவர் இந்தத் டேட்டிங் முறையில் சிக்கியிருக்கலாம் என்பதற்கான 7 அறிகுறிகள்:
1. உறவில் இருந்தும், உணர்வுப்பூர்வமாகத் தனிமையே உணர்தல்.
2. துணையிடமிருந்து எப்போதும் கவனத்தையும் ஆதரவையும் எதிர்பார்த்துக் காத்திருத்தல்.
3. துணையின் உணர்வுப்பூர்வமான அலட்சியத்தைத் தொடர்ந்து மன்னித்து ஏற்றுக் கொள்ளுதல்.
4. மனதளவில் நிறைவை விட, சோர்வையே அதிகம் உணர்தல்.
5. உணர்ச்சிப்பூர்வமான குழப்பத்தைக் கூட 'ஆழமான காதல்' எனத் தவறாகக் கருதுதல்.
6. ஆரோக்கியமற்ற உறவு எனத் தெரிந்தும் அதிலிருந்து வெளியே வர முடியாமல் இருத்தல்.
7. அந்த உறவினால் சுயமரியாதை மற்றும் மன அமைதியை இழத்தல்.
இதையும் படிங்க : இந்த ராசிகளைச் சேர்ந்த பெண்களை காதலிக்கும் ஆண்கள் கொஞ்சம் கவனமாக இருங்கள்! ஏன் தெரியுமா?