Published : Sep 22, 2022, 02:43 PM ISTUpdated : Sep 22, 2022, 02:52 PM IST
Sani Peyarchi 2022 Palangal: அக்டோபர் 23ல் சனி பகவான் தனது இயக்கத்தை மாற்றவுள்ளது,இதனால் சில ராசிகளுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும். அந்த அதிர்ஷ்ட ராசிகள் யார் என்பதை பற்றி இந்த பதிவில் காணலாம்.
நீதியின் கடவுளான சனி பகவான் அவரவர் செயல்களுக்கு ஏற்ப நல்ல மற்றும் தீய பலன்களை தருகிறார். சனி பகவான், தனது வக்ர நிலையை மாற்றும்போது, சில ராசிக்காரர்கள் நல்ல பலன்களை அடைவார்கள், சிலர் வேதனை கொள்வார்கள். ஜூலை 12 ஆம் தேதி முதல் சனி பகவான் மகர ராசியில் வக்ர நிலையி கோச்சாரம் செய்து வருகிறார். இப்போது அடுத்த மாதம் சனி பகவான் தனது இயக்கத்தை மாற்றவுள்ளார்.
அதன்படி, அக்டோபர் 23 ஆம் தேதி சனி பகவான் வக்ரமாக உள்ளார். சனி பகவானின் பாதை நேர் இயக்கத்தில் மாறவுள்ளது. இதனால், சில ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும். சனியின் இயக்க மாற்றத்தால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு சுப பலன்கள் கிடைக்கும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
36
Sani Peyarchi 2022 Palangal:
கடகம்:
கடக ராசிக்காரர்களுக்கு சனியின் மாற்றம் சிறப்பாக இருக்கும். இந்த கால கட்டத்தில், சனி பகவானின் சிறப்பு அருள் கிடைக்கும். குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் விலகும். வியாபாரத்தில் பொருளாதார நிலை வலுவாக இருக்கும். இதன் மூலம் தொழிலில் லாபம் பெற முடியும். திடீர் பண ஆதாயம் கிடைக்கும்.
துலாம் சனியின் சஞ்சாரம் துலாம் ராசிக்காரர்களுக்கும் நல்ல பலன்களை அளிக்கும். இந்த நேரத்தில், நிதி நிலைமை முன்பை விட சிறப்பாக இருக்கும். வியாபாரத்தில் முதலீடு செய்த பலன் கிடைக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வுடன் இடமாற்றமும் கூடும். இந்த இடமாற்றம் உங்களுக்கு அனுகூலமாக இருக்கும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
56
Sani Peyarchi 2022 Palangal:
விருச்சகம்:
விருச்சிக ராசிக்கு சனியின் இயக்கம் சாதகமாக இருக்கும். இந்த கால கட்டத்தில், வருமானம் அதிகரிக்கும். வியாபாரத்தில் வளர்ச்சி இருக்கும். குடும்ப பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். உத்யோகத்தில் பொருளாதார நிலை முன்பை விட சிறப்பாக இருக்கும். இது தவிர, சொத்து மற்றும் வாகனம் வாங்குவதற்கான நல்ல யோகம் இப்போது உருவாகும்.
66
Sani Peyarchi 2022 Palangal:
மீனம்
மீன ராசிக்கு சனி பகவானின் மாற்றம் மிகவும் சாதகமாக கருதப்படுகிறது. சனி பகவான் இந்த ராசியின் நன்மை தரும் வீட்டில் சஞ்சரிக்கப் போகிறார். இத்தகைய சூழ்நிலையில், சனி பெயர்ச்சி காலத்தில் மிகப்பெரிய நிதி நன்மைகளைப் பெறலாம். உத்தியோகத்தில் மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். குடும்பமும், மகிழ்ச்சியாக இருக்கும். இருப்பினும் குடும்பத்தில் பொறுப்புணர்ச்சி அதிகரிக்கும்.