பொதுவாக குழந்தைகளுக்கு காய்ச்சல் வந்தால் சரியாக சாப்பிட மாட்டார்கள். இதனால் அவர்களின் உடலில் இருக்கும் ஆற்றலானது இழக்கப்பட்டு, அவர்கள் குணமாவது தாமதமாகப்படும். இந்த சமயத்தில் பெற்றோர்களும் குழந்தைக்கு என்ன மாதிரியான உணவை உணவுகளை கொடுத்தால் சாப்பிடுவார்கள். மேலும் என்னென்ன உணவுகளை கொடுக்கக் கூடாது என்பதில் குழப்பமாக இருப்பார்கள்.
ஆனால், உண்மையில் காய்ச்சலின் போது குழந்தைகள் உடலானது நோயை எதிர்த்து போராடும். இதனால் அவர்களது உடலிலிருந்து ஆற்றல், நீர் மற்றும் ஊட்டச்சத்துக்கள் குறையும். எனவே, எளிதில் ஜீரணமாகும் மற்றும் உடலை நீரேற்றமாக வைக்கும் உணவுகளைக் கொடுக்க வேண்டும். பசி குறைவாக இருந்தாலும், கூட சிறிய அளவில் ஆரோக்கியமான உணவை கொடுங்கள்.