துணிகளில் கறை பட்டுருச்சா ?அப்போ கவலைய விடுங்க. இதனை தேய்த்தால் போதும் கறை இருந்த இடம் காணாமல் போகும்.

Published : Mar 08, 2023, 10:03 PM ISTUpdated : Mar 08, 2023, 10:04 PM IST

துணிகளில் சாயக் கறையோ அல்லது வேறு விதமான கறைகள் படிந்தால், எப்படி அகற்றுவது , மேலும் பழைய வெள்ளை சட்டையை கூட புதியது போன்று ஜொலிக்க வைக்க என்ன செய்ய வேண்டும்? இம்மாதிரியான வீட்டு குறிப்புகளை இந்த பதிவில் நாம் காண உள்ளோம்.

PREV
14
துணிகளில் கறை பட்டுருச்சா ?அப்போ கவலைய விடுங்க. இதனை தேய்த்தால் போதும் கறை இருந்த இடம் காணாமல் போகும்.

தினமும் துணிகளை துவைக்கும் பொழுது வெள்ளை நிற துணிகளை தனியாகவும் , கலர் துணிமணிகளை தனியாகவும் தான் அனைவரும் துவைப்பார்கள். ஒரு வேளை தெரியாமல் அனைத்தையும் சேர்த்து துவைத்து விட்டால் சாயம் போகும் துணியுடன், வெள்ளை நிற துணிகள் சேர்த்து விட்டால் பின் அந்த வெள்ளைத் துணியை உடுத்த முடியாத நிலைக்கு வந்து விடும். இப்படி துணிகளில் சாயக் கறையோ அல்லது வேறு விதமான கறைகள் படிந்தால், எப்படி அகற்றுவது , மேலும் பழைய வெள்ளை சட்டையை கூட புதியது போன்று ஜொலிக்க வைக்க என்ன செய்ய வேண்டும்? இம்மாதிரியான வீட்டு குறிப்புகளை இந்த பதிவில் நாம் காண உள்ளோம். 

24


வெள்ளை நிறத் துணிகளில் கறை பட்டால் நாம் வீட்டில் குளிக்க பயன்படுத்தப்படும் ஷாம்பூ இருந்தால் போதும், சிறிது ஷாம்பூவை கறைப்பட்ட இடங்களில் ஸ்ப்ரெட் செய்து சுமார் 10 நிமிடங்கள் முதல் 15 நிமிடங்கள் வரை ஊற வைத்து விட வேண்டும். பின் அந்த துணிகளை எப்போதும் துவைப்பது போல் ப்ரஷ் வைத்து தேய்த்து அலசினால் போதும், வெள்ளை துணியில் பட்ட கறை உடனடியாக மறைந்து விடும். வெகு நாட்களாக இருக்கும் கறையென்றால் ஷாம்பூ தராது .

நீண்ட நாட்களாக இருக்கும் கறைகளுக்கு கொஞ்சம் சமையல் சோடாவை கறைகளின் மீது போட்டு தேய்த்து பின் அதன் மேல் பாதி அளவு எலுமிச்சை பழச்சாறு ஊற்றி 10 நிமிடங்கள் வரை அப்படியே வைத்து விடுங்கள். 10 நிமிடங்களுக்கு பிறகு, சூடான தண்ணீரில் போட்டு தேய்த்து அலசினால் எத்தனை நாள்பட்ட கறையாக இருப்பினும் அனைத்தும் காணாமல் போகும். 

விரைவில் கர்ப்பம் ஆக வேண்டும் என்றால்.. எப்போது உடலுறவு கொள்ள வேண்டும்..?

34

வெள்ளை துணிகளை எப்போதும் பளிச்சுன்னு வெண்மையாக ஜொலிக்க வைக்க துணிகளை எப்போதும் சூடான தண்ணீரில் துவைத்ல் மிகச் சிறந்தது. இதனால் தான் இப்பொழுது இருக்கும் வாஷிங் மெஷினில் ஹாட் வாட்டர் வசதிகள் உள்ளன.

துணிகளை எப்போதும் புதுசா வாங்கினது போன்று வைத்துக் கொள்ள வேண்டுமா?அப்படியென்றால் துணிகளுக்கு கஞ்சி போட்டு துவைத்தால் போதும். துணிகள் எப்போதும் ஓத்துச்சு போன்று ஜொலிக்கும்.

முன்பெல்லாம் கொஞ்சம் சாதம் வடித்த கஞ்சியில் கொதித்த சூடான தண்ணீரை ஊற்றி நன்றாக கலந்து துணிகளை போட்டு ஊற வைத்து துவைப்பார்கள். அப்படி செய்தால் துணிகள் மொற மொறவென்று புதுசாக வாங்கினது போன்று இருக்கும். நீட்டா அயர்ன் செய்து போட்டுக் கொள்ளலாம்.

44

இப்போது பலரும் குக்கரில் சாதம் சமைப்பதால் கஞ்சி கிடைப்பதில்லை. உங்களிடம் கஞ்சி தண்ணீர் இல்லையென்றால் ஒரு பக்கெட்டில் சூடான தண்ணீர் பாதி அளவு ஊற்றிக் கொண்டு அதில் 1/4 கை அளவு உப்பு போட்டு கரைத்து விடுங்கள். பின் துணிகளை போட்டு ஊற வைத்து விடுங்கள். 1 மணி நேரத்திற்கு பிறகு பிரஷ் வைத்து தேய்த்து துவைத்தால் ஆடைகளில் இருக்கும் அழுக்குகள் அனைத்தும் நீங்கி சூப்பராக புதிது போன்று ஜொலிக்கும்.

துணிகளில் காபி, டீ கறை அல்லது எண்ணெய், குழம்பு, சாம்பார், போன்ற கறைகள் பட்டால் ,கறைகள் மீது சிறிது வினிகரை விட்டு ஷாம்பூ போட்டு ஊற வைத்து விட்டு சுமார் 1/2 நேரத்திற்கு பிளவு ஊறிய துணிகளை சூடான தண்ணீரில் டிப் செய்து சோப்பு போட்டு தேய்த்தால் போதும். கறை இருந்த இடம் காணாமல் போய்விடும்.

பொதுவாக துணிகளை சூடான தண்ணீரில் டிடெர்ஜென்ட் போட்டு குறைந்தபட்சம் 1 மணி நேரமாவது ஊற வைத்து துவைத்தாலே பிரஷ்சை போட்டு தேய்க்க அவசியம் இருக்காது.  அழுக்குகள் இருக்கக்கூடிய காலர், மணிக்கட்டு (wrist ) அழுக்குகள் நீங்க, வினிகருடன் லெமன் சேர்த்து ஊற வைத்து துவைத்தால் அனைத்து அழுக்குகளும் உடனே நீங்கி விடும். இந்த ஈஸியான டிப்ஸ்களை நீங்களும் ட்ரை பண்ணி பார்த்து துணிகளை எப்போதும் புதுசாக வச்சுக்கோங்க!

click me!

Recommended Stories