காபி, சோடா அதிகமாக குடித்தால் பக்கவாதம் ஏற்படும் ஆபத்து அதிகமாம்! அப்ப டீ?

First Published Oct 7, 2024, 2:37 PM IST

சோடா, செயற்கை குளிர்பானங்கள் மற்றும் அதிகப்படியான காபி ஆகியவை பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.

சோடா, செயற்கை குளிர்பானங்கள் மற்றும் காபி ஆகியவற்றை அதிகம் சாப்பிடுகிறீர்களா? ஆம், எனில் நீங்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டியது அவசியம். ஆம். சமீபத்தில் வெளியான ஆய்வு முடிவுகளில் இது பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை கணிசமாக அதிகரிக்கூடும் என்பது தெரியவந்துள்ளது.

ஒரு நாளைக்கு நான்கு கப் காபி குடிப்பது பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். ஆனால் அதே நேரம் ஒரு நாளைக்கு 3-4 கப் பிளாக் டீ அல்லது கிரீன் டீ குடிப்பது பொதுவாக பக்க்வாதம் ஏற்படும் வாய்பை குறைக்கிறது என்பது தெரியவந்துள்ளது.

மெக்மாஸ்டர் பல்கலைக்கழகம் கனடா மற்றும் சர்வதேச நெட்வொர்க்குடன் இணைந்து கால்வே பல்கலைக்கழகத்தின் புதிய கண்டுபிடிப்புகளின்படி, சர்க்கரை-இனிப்பு மற்றும் செயற்கையாக இனிப்பு சேர்க்கப்பட்ட குளிர்பானங்கள் பக்கவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்பை 22 சதவீதம் அதிகரிக்கிறது என்பது தெரியவந்துள்ளது.

மேலும், ஒரு நாளைக்கு இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட முறை இந்த பானங்கள் குடிப்பது மூலம் ஆபத்து கடுமையாக அதிகரிப்பதாகவும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு/மத்திய ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு, ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்கா ஆகிய நாடுகளில் ஃபிஸி பானங்கள் மற்றும் பக்கவாதம் ஏற்படும் வாய்ப்பு ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பு அதிகமாக இருந்தது என்றும் இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

Latest Videos


பழச்சாறு / பானங்களுடன் தொடர்புடைய இரத்தப்போக்கு காரணமாக பெண்களுக்கு பக்கவாதம் ஏற்படுவதற்கான அதிக வாய்ப்புகள் உள்ளன. ஒரு நாளைக்கு 7 டம்ளருக்கு மேல் தண்ணீர் குடிப்பது, இரத்த உறைவு காரணமாக ஏற்படும் பக்கவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்பை குறைப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பழச்சாறு என விற்பனை செய்யப்படும் பல பொருட்கள் செயற்கை செறிவூட்டல் முறையில் தயாரிக்கப்படுகின்றன, இதில் அதிகளவு சர்க்கரைகளும், கெட்டுப்போகாமல் இருக்க ரசாயனங்களும் சேர்க்கப்படுகின்றன. இதனால் செயற்கை குளிர்பானங்கள் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கின்றன. பழச்சாறு பானங்கள் இரத்தப்போக்கு காரணமாக பக்கவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்பு 37 சதவீதம் அதிகரிக்கும் என்பது தெரியவந்துள்ளது. 

Cool drinks summer

காபி vs தேநீர் குடிப்பது

ஒரு நாளைக்கு நான்கு கப் காபிக்கு மேல் குடிப்பதால், பக்கவாதம் ஏற்படும் வாய்ப்பு 37 சதவீதம் அதிகரித்தது, ஆனால் குறைந்த அளவு உட்கொள்வதால் பக்கவாதம் ஏற்படும் அபாயத்துடன் தொடர்புடையது அல்ல. மாறாக, டீ குடிப்பதால் பக்கவாதம் ஏற்படும் வாய்ப்பு 18-20 சதவீதம் குறைகிறது என்பதும் தெரியவந்துள்ளது. மேலும், ஒரு நாளைக்கு 3-4 கப் பிளாக் டீ குடிப்பது பக்கவாதம் வருவதற்கான வாய்ப்பு 29 சதவீதம் குறைக்கிறது.. குறிப்பாக ஒரு நாளைக்கு 3-4 கப் க்ரீன் டீ குடிப்பது பக்கவாதம் ஏற்படுவதற்கான 27 சதவீதம் வாய்ப்பு குறைப்பதாக தெரியவந்துள்ளது..

ஆனால் அதே நேரத்தில் பால் சேர்ப்பது தேநீரில் காணப்படும் ஆக்ஸிஜனேற்றத்தின் நன்மை விளைவுகளை குறைக்கலாம் அல்லது தடுக்கலாம். எனவே பால் சேர்த்து டீ குடிப்பவர்களை விட, பிளாக் டீ அல்லது க்ரீன் டீ குடிப்பவர்களுக்கு பக்கவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைவு என்பது தெரியவந்துள்ளது.

click me!